புதன், 10 நவம்பர், 2010

பிளாங்கா ரைஸ்ஸின் தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி

தீபாவளியை முன்னிட்டு, 04/11/2010 அன்று நம் பள்ளியில், தீபாவளிக் கொண்டாட்ட கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது படைக்கப்பட்ட அங்கங்கள் அனைத்தும் பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தன. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்களும் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!

நிகழ்ச்சியின் முதல் நடனமாகத் தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவிகள் படைத்த நடனம் அனைவரையும் ஈர்த்தது:



நிகழ்ச்சியின்போது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் விறுவிறுப்பான ஆட்டம் அனைவரையும் தாளம் போட வைத்தது.




நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகப் பிற இன ஆசிரியர்கள் வழங்கிய நடனம் அனைவரையும் மெய்ம்மறக்கச் செய்தது.




நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:






மொத்தத்தில், பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்ட நிகழ்ச்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது என்றால் அது சிறிதளவும் மிகையாகாது!

வெள்ளி, 5 நவம்பர், 2010

தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!

அனைத்து இந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எங்களது இனிய தீபாவளி
நல்வாழ்த்துக்கள்!

04/11/2010 அன்று நம் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டங்களின் போது எடுக்கப்பட்ட படச்சுருள்கள் விரைவில் வலைப்பூவில் இடம்பெறவிருக்கின்றன....
அவற்றை எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

வெள்ளி, 1 அக்டோபர், 2010

தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்கள் வாழ்த்துகள்!

தொடக்கநிலை 6 மாணவர்கள்

படத்தில் (பின் வரிசை - இடதிலிருந்து வலம்):
சௌந்தர்யா, ஃபாஸ்தினா, நிவாஷினி, அனிதா, ஷஹிரா, இர்ஃபான், முபாரக், கணேஷ், அமிருள்

படத்தில் (முன் வரிசை - இடதிலிருந்து வலம்):
ஜஸ்மினா, முனீரா, ஐநூன், ஷஹிடா, அர்ஷாத், அலீஃப், தௌஃபிக்

படத்தில் இடம்பெறாதவர்கள்:
அசினா, அயிஷா, யுவநித்தியா, ஹஃபிஸி, நேதாஜி


தொடக்கநிலை இறுதியாண்டுத் தேர்வுகளை எழுதவிருக்கும் எங்களது தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.


'நிமிர்ந்து நில். துணிந்து செல்.
தொடங்குகிறது உன் யுகம்.

நினைத்ததை நடத்திடு.
நினைப்புதான் உன் பலம்.

தடைகளை உடைத்திடு.
தாமதம் அதை விடு. '

- கங்கை அமரன் (பாடலாசிரியர்)

உங்களால் முடியும், செல்வங்களே!
தன்னம்பிக்கையுடன் உங்கள் ஆண்டிறுதித் தேர்வுகளை எழுதி, அவற்றில் நீங்கள் சிறந்து விளங்க எங்களின் இனிய நல்வாழ்த்துகள்.


ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

எங்கள் மாணவச் செல்வங்களுக்குத் தமிழாசிரியர்கள் ஐவரின் இதயங்கனிந்த சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

நண்பனே! எனது உயிர் நண்பனே!

'நண்பன்' என்னும் தலைப்பில் தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் சுயமாக எழுதிய கவிதைகளும், பாடிய பாடல்களும் இதோ உங்களுக்காக. கேட்டு மகிழுங்கள்!

யூசுஃப் (5A) :




Click here to listen in Windows Media Player

ஆஷிக் (5A) :




Click here to listen in Windows Media Player

மிர்சான் (5A) :




Click here to listen in Windows Media Player

பாத்திமா (5B) :




Click here to listen in Windows Media Player


ஷாஃபிஸ் (5B) :





Click here to listen in Windows Media Player


லவின்யா (5C) :






Click here to listen in Windows Media Player

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

தேசிய தின வாழ்த்துகள்!

வரும் திங்கட்கிழமை (09/08/10), நம் தேசத்தின் 45-வது பிறந்தநாள்! அனைவருக்கும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ் மொழிப் பிரிவினரின் இனிய தேசிய தின நல்வாழ்த்துக்கள்!

மாணவர்களே, கிடைத்திருக்கும் இந்த நீண்ட விடுமுறையைப் பயனுள்ள வழிகளில் செலவிடுங்கள்!

புதன், 4 ஆகஸ்ட், 2010

பாடுவோம் வாருங்கள்!




வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.

திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு.
திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு.
பல இன ஒற்றுமை நிலவிடும் நாடு; மக்கள் நலம் பேணும் உயர்திரு நாடு.

வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.

வாழ்க! வாழ்க! சிங்கை நாடு. வாழ்க! வாழ்க! சிங்கை நாடு.
வாழ்க! வாழ்க! சிங்கை நாடு. வாழ்க! வாழ்க! சிங்கை நாடு.

திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு
பல இன ஒற்றுமை நிலவிடும் நாடு; மக்கள் நலம் பேணும் உயர்திரு நாடு

வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.


தேசிய தினக் குதூகலம்

சென்ற மாதம் தொடக்கநிலை 5 மாணவர்கள் பாடாங் அரங்கில் நடைபெற்ற தேசிய தின முன்னோட்ட நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்கள். அதனைப் பற்றி,  மாணவர்கள் தமிழ் வகுப்பில் ஒரு கட்டுரை எழுதினார்கள்.

அவர்கள் எழுதிய கட்டுரைகளில் சிறந்த இரண்டு கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு....

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நம் நாட்டுக் கொடியை அறிவோமா?


நம் நாட்டுக் கொடி சிவப்பு நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் அமைந்திருக்கிறது. கொடியின் மேல் பகுதி சிவப்பு, கீழ்ப்பகுதி வெள்ளை. நம் நாட்டு மக்களின் நட்பு மனப்பான்மையையும் சகோதரத்துவத்தையும் சிவப்பு நிறம் குறிக்கிறது. மக்களிடத்தில் உள்ள தூய்மையான சீரிய பண்பினை வெள்ளை நிறம் குறிக்கிறது. கொடியின் மேல் பகுதியில், கொடிக் கம்பத்தின் அருகே ஓர் இளம்பிறையும் அதைச் சுற்றி ஐந்து விண்மீன்களும் உள்ளன. இளம் நாடொன்று ஐந்து குறிக்கோள்களான மக்களாட்சி (ஜனநாயகம்), அமைதி, முன்னேற்றம, நீதி, சமத்துவம் ஆகியவற்றை நோக்கிச் செல்வதை அவை குறிக்கின்றன.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

விடுமுறைக்கான விடுகதைகளும் அதன் பதில்களும்

மாணவர்களே இதோ விடுமுறையில் கேட்கப்பட்ட விடுகதைகளும் அதன் பதில்களும் (சிவப்பு நிறத்தில்):

1. உயிர்வாழ உதவும் நண்பன்; உலகமெல்லாம் உலவுகிறான். அவன் யார்?
(1) உயிர்
(2) காற்று
(3) புத்தகம்


2. கிளையில்லாத மரம் வெட்ட வெட்ட வளரும்? அது என்ன?
(1) தென்னை
(2) சிரிப்பு
(3) தலைமுடி

3. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
(1) மிளகாய்
(2) நாக்கு
(3) எலும்பு

இம்மூன்று விடுகதைகளுக்கும் சரியான பதில்களைக் கூறிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
  1. சபின் (5A)
  2. பாத்திமா (5B)
  3. ஷாஃபிஸ் (5B)
மூன்று விடுகதைகளுக்கும் சரியாகப் பதில்களைக் கூறிய இம்மூன்று மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி செய்த மற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி. முயற்சியைக் கைவிடாமல் அடுத்த முறை தொடர்ந்து முயலவும்!

வியாழன், 27 மே, 2010

விடுமுறைக்கான விடுகதைகள்! கண்டுபிடி! கண்டுபிடி!

மாணவர்களே, இதோ உங்களுக்காக மூன்று புதிய விடுகதைகளுடன் மீண்டும் வந்துவிட்டது, 'கண்டுபிடி! கண்டுபிடி!' அங்கம்.

பின்வரும் விடுகதைகளுக்கு உங்கள் பதில்களை இப்போதே நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

1. உயிர்வாழ உதவும் நண்பன்; உலகமெல்லாம் உலவுகிறான். அவன் யார்?
(1) உயிர்
(2) காற்று
(3) புத்தகம்


2. கிளையில்லாத மரம் வெட்ட வெட்ட வளரும்? அது என்ன?
(1) தென்னை
(2) சிரிப்பு
(3) தலைமுடி

3. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
(1) மிளகாய்

(2) நாக்கு
(3) எலும்பு

இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! இம்மாதம் யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

புதன், 26 மே, 2010

தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாழ்த்துப்பாடலின் படச்சுருள்

அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வாழ்த்துப்பாடலின் படச்சுருள் இது.
பார்த்து, ரசித்து, கேட்டு மகிழுங்கள்!

செவ்வாய், 25 மே, 2010

சென்ற மாத விடுகதைகளும் பதில்களும்

மாணவர்களே இதோ சென்ற மாத விடுகதைகளும் அதன் பதில்களும் (சிவப்பு நிறத்தில்):

1. ஆற்றைக் கடக்கும்; அக்கரை போகும்; தண்ணீரில் கலக்காது; தானும் நடக்காது; அது என்ன?

(1) மண்
(2) கப்பல்
(3) பாலம்

2. ஊரெல்லாம் சுற்றுவான். வீட்டுக்குள் வரமாட்டான். அவன் யார்?

(1) தண்ணீர்
(2) செருப்பு
(3) வாசல்

3. நான் பெற்ற பிள்ளைக்கு ஒற்றைக்கண். அது என்ன?

(1) ஊசி
(2) முட்டை
(3)நிலா

இம்மூன்று விடுகதைகளுக்கும் சரியான பதில்களைக் கூறிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
  1. பாத்திமா (5B)
  2. சௌந்தர்யா (6A)
மூன்று விடுகதைகளுக்கும் சரியாகப் பதில்களைக் கூறிய இவ்விரண்டு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி செய்த மற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி. முயற்சியைக் கைவிடாமல் அடுத்த முறை தொடர்ந்து முயலவும்!

விடுமுறை வந்துவிட்டது!

நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயா?
பொறுமை கடலினும் பெரிது.
அப்படியென்றால் நேரத்தை வீணாக்காதே
ஏனெனில் வாழ்க்கையின் மூலதனமே நேரந்தான்.
                                                                       - மேல்நாட்டு அறிஞர் ஒருவர்

தேர்வுகள் முடிந்து, பள்ளி விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களே, நேரம் பொன் போன்றது. உங்கள் விடுமுறையினை உற்சாகத்துடனும் பயனுள்ள வழியிலும் கழித்திட தமிழாசிரியர்கள் எங்கள் ஐவரின் இனிய நல்வாழ்த்துக்கள்!

வியாழன், 20 மே, 2010

இணையம் வழிக் கற்றல் தினம் (E-Learning Day) - 24/05/2010

24/05/2010 பள்ளியில் இணையம் வழிக் கற்றல் தினம் (E-Learning Day). அதனை முன்னிட்டு, தொடக்கநிலை மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான இணையம் வழிக் கற்றல் பாடங்கள் இவ்வலைப்பூவில் இணைக்கப்பட்டுள்ளன. வலப்புறத்தில் காணப்படும் 'E-Learning தினப் பாடங்கள் (24/05/2010)' என்பதன் கீழ்த் தோன்றும் உங்கள் வகுப்பின் மீது கிலிக் செய்து, உங்களுக்காக இணைக்கப்பட்டுள்ள பாடத்தைச் செய்யவும்.

இனிதே இணையம் வழிக் கற்றிடுவோம்!

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

என் விடைகளை நான் எவ்வாறு இடுகையுடன் இணைப்பது?

மாணவர்களே, உங்கள் பதில்களை நீங்கள் எவ்வாறு இடுகையுடன் இணைப்பது குறித்து உதவி வேண்டுமா? கவலை வேண்டாம். இதோ உங்களுக்காகச் சில குறிப்புகள்.

1. முதலில் "No comments" என்பதைக் கிலிக் செய்யவும்.



கீழ்க்காணும் படிவம் தோன்றும்.




2. அடுத்து. கேள்வி எண்களையும் கேள்விகளுக்கான பதில் எண்களையும் "Leave a Reply" பெட்டியினுள் தட்டச்சு (type) செய்யவும்.



3. பின், "இவ்வாறு கருத்துரையிடு" என்னும் பகுதியைக் கிலிக் செய்து, "பெயர்/URL" என்னும் பகுதியைத் தேர்வு செய்யவும்.



4. கீழ்க்காணும் படிவம் தோன்றும். உங்கள் பெயரை தட்டச்சு செய்த பின், உங்கள் வகுப்பை அடைப்புக்குறியினுள் தட்டச்சு செய்யவும். "URL" பகுதியில் எதுவும் தட்டச்சு செய்ய வேண்டாம்.



5. இறுதியில், "கருத்துரை சேர்" என்பதைக் கிலிக் செய்ய வேண்டும். உங்கள் விடைகள் முதலில் ஆசிரியர் பார்வைக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகே, இடுகையுடன் இணைக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மேலும் உதவி தேவைப்பட்டால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் முரசு செய்தி நிறுவனத்திற்குக் கற்றல் பயணம்

நம் பள்ளியின் தமிழ் மொழி வாரத்தை முன்னிட்டு, 13/04/2010 நாள் அன்று, தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தமிழ் முரசு செய்தி நிறுவனத்திற்குக் கற்றல் பயணம் மேற்கொண்டார்கள். அப்பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

எங்களின் முதல் தமிழ்க் குறும்படம்

‘அவன் என்ன செய்வான்?’

பிளாங்கா ரைஸ் தமிழ்மொழிப் பிரிவு முதன்முதலாகத் தமிழில் ஒரு குறும்படத்தைத் தயாரித்துள்ளது. ‘அவன் என்ன செய்வான்?’ என்ற தலைப்பில் தயாரிக்கப்பட்டுள்ள இக்குறும்படம், பள்ளியின் தமிழ்மொழி வாரத்தை முன்னிட்டு, உங்கள் பார்வைக்கு இவ்வலைப்பூவில் வைக்கப்படுகிறது.

இக்குறும்படத்தைப் பார்த்துவிட்டு, உங்கள் முடிவினைத் தட்டச்சு செய்து இந்த இடுகையுடன் இணையுங்கள். உங்கள் கற்பனை வளத்தைச் சற்றுத் தட்டி எழுப்புங்களே!

இக்குறும்படத் தயாரிப்பில் உதவிய தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!


நல்வழி நடப்போம்

வகுப்பில் கற்ற செய்யுள் பழமொழிகளைச் சின்னத்திரையில் கண்டு மகிழ்வோம். கற்றதை நினைவில் பதிப்போம்.

தமிழ் மொழி வாரம் 2010

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் தமிழ் மொழி வாரம்!
(ஏப்ரல் 12 – ஏப்ரல் 16 2010)

தமிழ் மொழி வாரத்தை முன்னிட்டு, தமிழ்மொழிப் பிரிவு பற்பல நிகழ்ச்சிகளை மாணவர்களுக்காக ஏற்பாடு செய்துள்ளது. அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

திங்கட்கிழமை (12/04/2010)
- ‘நல்வழி நடப்போம்’ – படச்சுருள் அறிமுகம்
- ‘அவன் என்ன செய்தான்’ – தமிழ்க் குறும்படம் அறிமுகம்
- ‘வலைப்பூவில் கருத்துரைக்கலாம் வாங்க!’ (தொடக்கநிலை 5 & 6)

செவ்வாய்க்கிழமை (13/04/2010)
- ‘நானும் கவிஞனாகலாம்’ (தொடக்கநிலை 5)
- தமிழ் முரசு செய்தி நிறுவனத்திற்குக் கற்றல் பயணம் (தொடக்கநிலை 5 & 6)

புதன்கிழமை (14/04/2010)
- தமிழ்ப் புத்தாண்டு

வியாழக்கிழமை (15/04/2010)
- கதை சொல்லும் போட்டி (தொடக்கநிலை 3 & 4)
- பேச்சுப்போட்டி (தொடக்கநிலை 5 & 6)

வெள்ளிக்கிழமை (16/04/2010)
- மொழி விளையாட்டுகள் (தொடக்கநிலை 1 & 2)

திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (12/04/2010 - 16/04/2010)
- ‘தமிழ்மொழி – என் கருத்து’
- தினம் ஒரு விடுகதை

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்!

வெள்ளி, 2 ஏப்ரல், 2010

தமிழ் மொழி மாதம்

01 ஏப்ரல் 2010 தொடக்கம் 25 ஏப்ரல் 2010 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, பற்பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்குத் தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.singai-tamil.org/ என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 ஏப்ரல் தொடக்கம் 16 ஏப்ரல் வரை பள்ளியில் தமிழ்மொழி வாரம் அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.

தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்.

அன்புடன்,
தமிழ்மொழிப் பிரிவு

செவ்வாய், 30 மார்ச், 2010

நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டு உங்களுக்குப் பிடித்திருந்ததா?

29/03/10 அன்று நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டு உங்களுக்குப் பிடித்திருந்ததா என்பதை இப்போதே எங்களுக்குத் தெரிவியுங்கள்! இவ்வலைப்பூவின் வலதுப்புறத்தில் உள்ள 'நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டு உங்களுக்குப் பிடித்திருந்தா?’ என்ற வாக்கெடுப்பில் (Poll) உங்கள் வாக்கை இன்றே அளியுங்கள்.

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 2 - 29/03/2010

தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) இரண்டாவது முறையாக மார்ச் மாதம் 29-ஆம் தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. வழக்கம்போல், சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் AVA அறை என்னும் கேள்வி காட்சி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகள் சில அறிமுகப்படுத்தப்பட்டன. பரமபதம், ஆடு புலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி ஆகிய நான்கு விளையாட்டுகள் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். தங்கள் குழுவுக்கென்று ஒதுக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டினை மாணவர்கள் விளையாடினார்கள். அவர்களுக்குத் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் வழிகாட்டினார்கள். மொத்தத்தில், அன்றைய மாணவர்க்கூட்டம் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது எனலாம்.









தமிழ்த் தட்டச்சு வகுப்புகள்



இத்தவணையின் தொடக்கத்திலேயே, நம் மாணவர்கள் தமிழில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடக்கநிலை ஐந்தாம், ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத் திங்கட்கிழமை (22/03/10) அன்றும் தொடக்கநிலை மூன்றாம், நான்காம் வகுப்பு மாணவர்களுக்குச் செவ்வாய்கிழமை (23/03/10) அன்றும் தமிழ்த் தட்டச்சு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் அனைவரும் வெகுநாளாகக் காத்திருந்த பலநாள் கனவு இந்நாள்களில் நிறைவேறின. அவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் அவ்வகுப்புகளுக்கு வந்து, தமிழில் தட்டச்சு செய்வதை நன்கு கற்றுக்கொண்டனர்.

திங்கள், 29 மார்ச், 2010

நம் மாணவர்கள் கலந்துகொண்ட வளமூட்டும் வகுப்புகள்

கடந்த முதல் தவணையில், தொடக்கநிலை மூன்று முதல் ஆறு வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் வளமூட்டும் வகுப்புகளில் கலந்துகொண்டார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:

தொடக்கநிலை மூன்று மாணவர்கள் – வாசிப்போர் அரங்கம்
தொடக்கநிலை நான்கு மாணவர்கள் – கருத்தறிதல்
தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் – புத்தாக்கத்துடன் எழுதுதல்
தொடக்கநிலை ஆறு மாணவர்கள் – பேச்சுத்திறனை வளர்த்தல்

மாணவர்களுக்கு அவ்வகுப்புகள் ஒரு புது அனுபவமாக இருந்ததோடு, பல திறன்களையும் வளர்த்துக்கொள்ள நல்ல வாய்ப்பாகவும் அமைந்தன எனலாம். அவ்வகுப்புகளின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்களின் பார்வைக்கு:






வெள்ளி, 12 மார்ச், 2010

கண்டுபிடி! கண்டுபிடி! இம்மாத விடுகதைகள்!

மாணவர்களே, இதோ உங்களுக்காக மூன்று புதிய விடுகதைகளுடன் வந்துவிட்டது, 'கண்டுபிடி! கண்டுபிடி!' அங்கம்.

பின்வரும் விடுகதைகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

1. ஆற்றைக் கடக்கும்; அக்கரை போகும்; தண்ணீரில் கலக்காது; தானும் நடக்காது; அது என்ன?

(1) மண்
(2) கப்பல்
(3) பாலம்

2. ஊரெல்லாம் சுற்றுவான். வீட்டுக்குள் வரமாட்டான். அவன் யார்?

(1) தண்ணீர்
(2) செருப்பு
(3) வாசல்

3. நான் பெற்ற பிள்ளைக்கு ஒற்றைக்கண். அது என்ன?

(1) ஊசி
(2) முட்டை
(3)நிலா

இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! இம்மாதம் யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

சென்ற மாத விடுகதைகளும் பதில்களும்

மாணவர்களே இதோ இம்மாத விடுகதைகளும் அதன் பதில்களும் (சிவப்பு நிறத்தில்):

1. அண்ணனுக்கு ஒட்டாது தம்பிக்கு ஒட்டும். அது என்ன?
(1) முதுகு
(2) உதடுகள்
(3) கண்ணிமைகள்

2. பகலில் சுருண்டு இருப்பான். இரவில் விரிந்திருப்பான். அவன் யார்?
(1) கால்
(2) நிலவு
(3) பாய்

3. கை உண்டு கால் இல்லை. உடல் உண்டு தலை இல்லை. அது என்ன?
(1) நிழல்
(2) கடிகாரம்
(3) சட்டை

இம்மூன்று விடுகதைகளுக்கும் சரியான பதில்களைக் கூறிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. கீர்த்தனா (3A)
  2. ஷாலினி (3A)
  3. டேவிட் ராஜ் (3B)
  4. ஜஃவார் (3B)
  5. ஜொஷிகா (3C)
  6. நஜிமுடின் (3D)
  7. குருஷியத் (3D)
  8. பிரியங்கா (3D)
  9. சபின் சாரா (5A)
  10. யூசுஃப் அஸ்மான் (5A)
  11. ரஹ்மான் அலி (5C)
  12. சினேஹா (5C)
  13. சௌந்தர்யா (6A)

மூன்று விடுகதைகளுக்கும் சரியாகப் பதில்களைக் கூறிய இம்மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி செய்த மற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி. முயற்சியைக் கைவிடாமல் அடுத்த முறை தொடர்ந்து முயலவும்!

பாடலைக் கேள், பயிற்சியைச் செய்!

தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,

பின்வரும் பாடல் பகுதியை நீங்கள் உங்கள் தமிழ் வகுப்பில் கேட்டிருப்பீர்கள். இப்பாடல் பகுதியை மீண்டும் கேளுங்கள். கேட்டுக்கொண்டே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயிற்சித்தாளைச் செய்து முடியுங்கள்.




முடித்த பயிற்சித்தாளை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டிய நாள்: 19 ஏப்ரல் 2010, திங்கட்கிழமை

வியாழன், 4 பிப்ரவரி, 2010

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 25/01/2010

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் வரலாற்றில் முதன்முறையாகத் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) ஜனவரி மாதம் 25-ஆம் தேதியன்று நடைபெற்றது. சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் AVA அறை என்னும் கேள்வி காட்சி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்குத் ‘தமிழில் பேசுவோம்; தமிழை நேசிப்போம்’ என்னும் தலைப்பில் நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. நம் பள்ளியில் உள்ள தமிழ் பேசக்கூடிய ஆங்கில மொழி ஆசிரியர்கள் சிலர் தமிழ் பேசுவதை மாணவர்கள் படச்சுருள் வாயிலாகக் கேட்டார்கள். தமிழைப் பேசுவதில் பெருமிதம் கொள்ளவேண்டும், தமிழில் பயமின்றி அதிகமாகப் பேச வேண்டும், அதனை வெட்கப்படாமல் பேச வேண்டும் எனப் பல்வேறு கருத்துக்கள் அப்படச்சுருளின்வழி மாணவர்களிடம் வலியுறுத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர், செல்வி. கீதா அவர்கள், மாணவர்களிடம் உரையாற்றினார். தங்களின் தலைமையாசிரியர் தமிழில் எந்தப் பயமும் வெட்கமும் இல்லாமல் சரளமாகத் தமிழில் பேசுவதைக் கண்ட மாணவர்களுக்குத் தாங்களும் அவ்வாறு தமிழில் பேசவேண்டும் என்ற முனைப்பும் ஆர்வமும் ஏற்பட்டதை அவர்களின் முகங்கள் நன்கு வெளிப்படுத்தின. மொத்தத்தில், மாணவர்கள் அனைவரும் தமிழ்மொழியை அதிகமாகப் பயன்படுத்த இது போன்ற மாணவர்க்கூட்டம் வழிவகுக்கும் என்பது திண்ணம்.

அன்று மாணவர்களுக்குத் திரையிடப்பட்ட படச்சுருள்:
தமிழில் பேசுவோம். தமிழை நேசிப்போம்.

'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு'

இவ்வலைப்பூவில் அண்மையில் 'எனக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டு' என்ற வாக்கெடுப்பு நடந்து முடிந்தது. அதில் தொடக்கநிலை 5 மாணவர்கள் தங்களுக்கு மிகவும் பிடித்த பாரம்பரிய விளையாட்டுகளுக்கு வாக்களித்தார்கள்.


தங்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டாகப் பல மாணவர்கள்  சடுகுடு/கபடி விளையாட்டுக்கே வாக்களித்திருந்தார்கள். அவ்வகுப்பு மாணவர்களில் பலரையும் அவ்விளையாட்டு வெகுவாகக் கவர்ந்தது எனலாம். அவ்விளையாட்டை அவ்வகுப்பு மாணவர்கள் விளையாடியபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மீண்டும் உங்கள் பார்வைக்கு....

புதன், 20 ஜனவரி, 2010

கண்டுபிடி! கண்டுபிடி! பதில்களைக் கண்டுபிடி!

மாணவர்களே, பின்வரும் விடுகதைகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

இம்மாத விடுகதைகளை வழங்கிய தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!

விடுகதைகள்

1. அண்ணனுக்கு ஒட்டாது தம்பிக்கு ஒட்டும். அது என்ன?

(1) முதுகு
(2) உதடுகள்
(3) கண்ணிமைகள்


2. பகலில் சுருண்டு இருப்பான். இரவில் விரிந்திருப்பான். அவன் யார்?

(1) கால்
(2) நிலவு
(3) பாய்


3. கை உண்டு கால் இல்லை. உடல் உண்டு தலை இல்லை. அது என்ன?
 
(1) நிழல்
(2) கடிகாரம்
(3) சட்டை
 
 
இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

வெள்ளி, 15 ஜனவரி, 2010

பாரம்பரிய விளையாட்டுகளை ஒரு கை பார்த்த நம் மாணவர்கள்!

சென்ற திங்கட்கிழமை (11/01/2010),  நமது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பல்வேறு பாரம்பரிய விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆடுபுலி ஆட்டம், பரமபதம், தாயம், பல்லாங்குழி, சடுகுடு என நம் பாரம்பரிய விளையாட்டுகள் பலவற்றை அவ்வகுப்பு மாணவர்கள் விளையாடிப் பார்த்தனர்! அவர்களில் பலருக்கும் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுவது இதுவே முதல் முறை!

மாணவர்களின் ஆர்வநிலையும் ஈடுபாடும் இவ்வகுப்பில் நன்கு புலப்பட்டன. அவர்கள் உற்சாகமாக விளையாடிய போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு :






















தொடக்கநிலை 5 மாணவர்களே, உங்கள் கருத்துக்களை /  பிரதிபலிப்புகளை நாங்கள் வரவேற்கிறோம். நீங்கள் விளையாடிய பாரம்பரிய விளையாட்டுகள் குறித்தும் அவற்றை விளையாடியபோது உங்களுக்கு இருந்த மனநிலை குறித்தும் நாங்கள் அறிய விரும்புகிறோம். உங்கள் கருத்துக்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம். (Add comments)