செவ்வாய், 30 செப்டம்பர், 2014

நல்லாசிரியர் 2014

தமிழாசிரியர்களைப் போற்றிக் கௌரவிக்கும் வகையில் 12வது ஆண்டாகத் தமிழ் முரசு நாளிதழ் செப்டம்பர் ஆறாம் தேதி அன்று நல்லாசிரியர் விருது 2014 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து இருந்தது. சிங்கப்பூர் தமிழாசிரியர் சங்கம், கல்வி அமைச்சு ஆதரவுடன் ஆண்டுதோறும் நடக்கும் இந்நிகழ்ச்சியில் கல்வித் துணை அமைச்சர் சிம் ஆன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார். உமறுப் புலவர் தமிழ் மொழி நிலையத்தில் நடந்த இவ்விருது வழங்கும் நிகழ்ச்சியில் தொடக்க நிலை, உயர்நிலைப் பிரிவுகளில் மொத்தம் எட்டு ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதில் தொடக்கநிலை பிரிவில் நம் பள்ளியின் தமிழாசிரியரான திரு.மோகன் சுப்பையா வெற்றி வாகை சூடினார். அவருக்கு எங்கள் மனமார்ந்த நல்வாழ்த்துகள்! 








 


 

வியாழன், 4 செப்டம்பர், 2014

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 29/08/2014


29 ஆகஸ்ட் 2014 அன்று இவ்வாண்டின் இரண்டாம் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் அன்று காலை நடன அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். 

அங்கு, தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் பங்குபெற்ற என் கனவுக்கடை போட்டியில் இடம்பெற்ற ஒரு சில அங்கங்களும் படைப்புகளும் ஒளிப்பரப்பப்பட்டன. அதன் பிறகு, 'ஒரு நிமிடத்திறன்' அங்கத்தில் பங்குபெற்ற தங்கள் சக மாணவர்களின் படைப்புகளை அனைவரும் கண்டு மகிழ்ந்தார்கள். பங்கெடுத்த மாணவர்களுக்கு ஆரவாரமும் உற்சாகமும் கொடுத்த அதே வேளையில், அவர்களும் எப்படி இந்த அங்கத்தில் பங்குபெறலாம் என்பதைப் பற்றிய தகவல்களும் அன்று அவர்களுக்கு வழங்கப்பட்டன. 

விரைவிலேயே இன்னும் கூடுதலான மாணவர்களின் படைப்புகளையும் திறன்களையும் இந்த வலைப்பூவில் நீங்கள் எதிர்பார்க்கலாம்.