இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான மாணவர்க்கூட்டம் (Morning Assembly), 27/02/2012 தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. வழக்கம்போல் சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் தாய்மொழி அறை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அங்கு, அவர்களுக்கு நூல்களைப் படிக்கும் பழக்கம் பற்றியும் அப்பழக்கத்தால் விளையும் நன்மைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள பள்ளி நூலகத்தைப் பற்றியும் அந்நூலகத்தில் உள்ள ஒரு சில தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் தகவல்கள் வழங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவி ஷாலினி, தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ஜோஷிகா, ஷாலினி ஆகிய மூவரும் தாங்கள் படித்த ஒரு கதையைப் பற்றிக் கூடியிருந்த மாணவர்களிடம் கூறினார்கள்.