வியாழன், 19 ஆகஸ்ட், 2010

நண்பனே! எனது உயிர் நண்பனே!

'நண்பன்' என்னும் தலைப்பில் தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் சுயமாக எழுதிய கவிதைகளும், பாடிய பாடல்களும் இதோ உங்களுக்காக. கேட்டு மகிழுங்கள்!

யூசுஃப் (5A) :




Click here to listen in Windows Media Player

ஆஷிக் (5A) :




Click here to listen in Windows Media Player

மிர்சான் (5A) :




Click here to listen in Windows Media Player

பாத்திமா (5B) :




Click here to listen in Windows Media Player


ஷாஃபிஸ் (5B) :





Click here to listen in Windows Media Player


லவின்யா (5C) :






Click here to listen in Windows Media Player

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

தேசிய தின வாழ்த்துகள்!

வரும் திங்கட்கிழமை (09/08/10), நம் தேசத்தின் 45-வது பிறந்தநாள்! அனைவருக்கும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ் மொழிப் பிரிவினரின் இனிய தேசிய தின நல்வாழ்த்துக்கள்!

மாணவர்களே, கிடைத்திருக்கும் இந்த நீண்ட விடுமுறையைப் பயனுள்ள வழிகளில் செலவிடுங்கள்!

புதன், 4 ஆகஸ்ட், 2010

பாடுவோம் வாருங்கள்!




வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.

திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு.
திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு.
பல இன ஒற்றுமை நிலவிடும் நாடு; மக்கள் நலம் பேணும் உயர்திரு நாடு.

வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.

வாழ்க! வாழ்க! சிங்கை நாடு. வாழ்க! வாழ்க! சிங்கை நாடு.
வாழ்க! வாழ்க! சிங்கை நாடு. வாழ்க! வாழ்க! சிங்கை நாடு.

திருவெனும் அழகிய சிங்கை நம் நாடு; செய்தொழில் ஓங்கிடும் உரமிகு நாடு
பல இன ஒற்றுமை நிலவிடும் நாடு; மக்கள் நலம் பேணும் உயர்திரு நாடு

வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.
வருக வருக எம் தோழியரே நம் மனமது களித்திடப் பாடிடுவோம்.


தேசிய தினக் குதூகலம்

சென்ற மாதம் தொடக்கநிலை 5 மாணவர்கள் பாடாங் அரங்கில் நடைபெற்ற தேசிய தின முன்னோட்ட நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தார்கள். அதனைப் பற்றி,  மாணவர்கள் தமிழ் வகுப்பில் ஒரு கட்டுரை எழுதினார்கள்.

அவர்கள் எழுதிய கட்டுரைகளில் சிறந்த இரண்டு கட்டுரைகள் உங்கள் பார்வைக்கு....

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நம் நாட்டுக் கொடியை அறிவோமா?


நம் நாட்டுக் கொடி சிவப்பு நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் அமைந்திருக்கிறது. கொடியின் மேல் பகுதி சிவப்பு, கீழ்ப்பகுதி வெள்ளை. நம் நாட்டு மக்களின் நட்பு மனப்பான்மையையும் சகோதரத்துவத்தையும் சிவப்பு நிறம் குறிக்கிறது. மக்களிடத்தில் உள்ள தூய்மையான சீரிய பண்பினை வெள்ளை நிறம் குறிக்கிறது. கொடியின் மேல் பகுதியில், கொடிக் கம்பத்தின் அருகே ஓர் இளம்பிறையும் அதைச் சுற்றி ஐந்து விண்மீன்களும் உள்ளன. இளம் நாடொன்று ஐந்து குறிக்கோள்களான மக்களாட்சி (ஜனநாயகம்), அமைதி, முன்னேற்றம, நீதி, சமத்துவம் ஆகியவற்றை நோக்கிச் செல்வதை அவை குறிக்கின்றன.