திங்கள், 22 பிப்ரவரி, 2016
சனி, 20 பிப்ரவரி, 2016
தமிழ்மொழி கற்றல் விழா
பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி அன்று தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு தமிழ் மாணவர்கள் உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம் ஏற்பாடு செய்த தமிழ்மொழி கற்றல் விழாவில் பங்கு பெற்றார்கள். விழாவில் நடைபெற்ற அனைத்து அங்கங்களும் நடவடிக்கைகளும் மாணவர்கள் தமிழ்மொழியைப் பற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றியும் மேலும் அறிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுத்தன.
அதோடு நம் மாணவர்கள் மற்ற பள்ளிகளிலிருந்து வந்த தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களுடன் நட்புகொள்ளவும் அவர்களுடன் சேர்ந்து விளையாடவும் இந்த விழா வாய்ப்பு அளித்தது. மொத்தத்தில் விழாவில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இந்த விழா ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது எனலாம்.
அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
செவ்வாய், 16 பிப்ரவரி, 2016
வெள்ளி, 5 பிப்ரவரி, 2016
வியாழன், 4 பிப்ரவரி, 2016
கட்டியங்காரன் மாணிக்கம்
4-ஆம் தேதி பிப்ரவரி மாதம் அன்று தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கட்டியங்காரன் மாணிக்கம் என்ற நாடகம் ஒன்றைக் காண சென்றிருந்தார்கள். அங்கு அவர்கள் நாடகத்தைக் கண்டு களித்ததோடு, வெவ்வேறு நாடக வடிவங்களைப் பற்றியும் அறிந்துகொண்டார்கள். அன்று எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
புதன், 3 பிப்ரவரி, 2016
செவ்வாய், 2 பிப்ரவரி, 2016
பெற்றோர்ப் பயிலரங்கு 2016
2-ஆம் தேதி பிப்ரவரி மாதம் அன்று தொடக்கநிலை ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்காகப் பெற்றோர்ப் பயிலரங்கு ஒன்று நடைபெற்றது. அதில் தமிழ்மொழிப் பயிலரங்கின் போது பெற்றோருக்குத் தமிழ்ப் பாடங்கள், தமிழ் வகுப்பில் நடக்கும் நடவடிக்கைகள், தமிழ்த் தேர்வுகள், முழுமை மதிப்பீடு, வீட்டில் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவலாம் போன்ற பல தகவல்கள் வருகை தந்த பெற்றோருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)