ஞாயிறு, 15 பிப்ரவரி, 2015

செய்தி எழுதுவது எப்படி?

அன்பார்ந்த தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களே,


சென்ற வாரம் செய்தி எழுதுதல் பற்றிய பாடம் வகுப்பில் நடத்தப்பட்டது. அந்தப் பாடத்தைக் குறித்த உங்கள் பிரதிபலிப்புகளை இங்குப் பதிவு செய்யுங்கள்! 








வெள்ளி, 13 பிப்ரவரி, 2015

சொற்போர் 2015 தேர்வுச்சுற்று

07/02/2015 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2015 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்று தொடங்கியது. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர். 

ரியாஸ் (6S), ஃபைரோசா (6R), தேவ்ராஜ் (6S)
ராம்குமார் (5S), கிருபன் (5S)
இன்றைய பெற்றோர்கள் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு எனும் மனப்போக்கில் பிள்ளைகளுக்கு அதிக செல்லம் கொடுக்கின்றனர்’ என்ற தலைப்பை நம் பள்ளி மாணவர்கள் ஒட்டிப் பேசினார்கள். 


நம் பள்ளி மாணவிஃபைரோசா (6R) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!