புதன், 18 நவம்பர், 2009

நவம்பர் மாதச் சிந்தனை உங்களுக்காக

நீ வாழ்க்கையை நேசிக்கின்றாயா?
பொறுமை கடலினும் பெரிது.
அப்படியென்றால் நேரத்தை வீணாக்காதே
ஏனெனில் வாழ்க்கையின் மூலதனமே நேரந்தான்.
                                                                       - மேல்நாட்டு அறிஞர் ஒருவர்

தேர்வுகள் முடிந்து, பள்ளி விடுமுறையைக் குதூகலமாகக் கழிக்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் மாணவர்களே, நேரம் பொன் போன்றது. உங்கள் விடுமுறையினை உற்சாகத்துடனும் பயனுள்ள வழியிலும் கழித்திட தமிழாசிரியர்கள் எங்கள் ஐவரின் இனிய நல்வாழ்த்துக்கள்! 

செவ்வாய், 17 நவம்பர், 2009

வெற்றி நிச்சயம். இது வேதத் தத்துவம்!

இவ்வாண்டு நடைபெற்ற தமிழ் மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 16/11/2009 அன்று பள்ளியில் பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் வெற்றிக் கோப்பைகளுடன்:

போட்டிகளில் வெற்றிபெற்ற தொடக்கநிலை முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள்:

கதை சொல்லும் போட்டி வெற்றியாளர்கள்:















சொற்கள் உருவாக்கும் / கட்டுரை போட்டி வெற்றியாளர்கள்:















போட்டிகளில் வெற்றிபெற்ற தொடக்கநிலை மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள்:

கதை சொல்லும் போட்டி வெற்றியாளர்கள்:















கட்டுரை போட்டி வெற்றியாளர்கள்:















போட்டிகளில் வெற்றி பெற்ற தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்கள்:

பேச்சு / கட்டுரை போட்டி வெற்றியாளர்கள்:





 
 
 
 
 
 
 
 
 
 
 
வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!

வியாழன், 12 நவம்பர், 2009

இம்மாத விடுகதை

பள்ளி விடுமுறைக்கு முன், இதோ உங்களுக்காக வந்துவிட்டது, இம்மாத விடுகதை.

கிளை இல்லாத மரம்
வெட்ட வெட்ட வளரும்.
அது என்ன?


கண்டுபிடியுங்கள்! கண்டுபிடியுங்கள்!

புதன், 11 நவம்பர், 2009

பிளாங்கா ரைஸ்ஸின் தீபாவளிக் குதூகலம்!

16/10/2009 அன்று நம் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் களை கட்டின. நம் தமிழ் மாணவர்கள் படைத்த கலைநிகழ்ச்சி பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படச்சுருள்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன.


நிகழ்ச்சியின்போது தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் படைத்த நடனம் அனைவரையும் ஈர்த்தது:



நிகழ்ச்சியின்போது நம் மாணவர்கள் தங்கள் பாரம்பரிய உடைகளில் பவணி வந்தார்கள். அவர்களின் ஆடை அணிவகுப்பு மண்டபத்தில் இருந்தவர்களின் பலத்த கரவொலியை எழுப்பியது:



நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகத் திரு.காலிட் (Mr. Khalid) பாடிய பாடல்கள் அமைந்தன. அவர் வேற்றினத்தவராக இருந்தாலும், தமிழில் பாடி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார். வெளுத்து வாங்கிவிட்டார், திரு. காலிட்!



பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தம்முள் ஒளிந்திருக்கும் கலைத் திறன்களை வெளிக்கொணர்வதற்கு இந்தத் தீபாவளிக் கலைநிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக அமைந்தது என்றால் அது சிறிதளவும் மிகையாகாது!