புதன், 31 அக்டோபர், 2012

தொடக்கநிலை ஆறாம் வகுப்புக்கான தமிழ்மொழி முகாம்

31/10/2012 அன்று தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ்மொழி முகாம் ஒன்று நடத்தப்பட்டது. ‘2.5 மணி நேர அட்டகாசம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட அம்முகாமில் மாணவர்கள் தமிழ்மொழி தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்கள். அது மட்டும் ரகசியம்’, தமிழில் என்ன?’, பேசக்கூடாது’, நடித்துப் பார்க்கலாம் வாங்க போன்ற பல நடவடிக்கைகள் மாணவர்களுக்காக நடத்தப்பட்டன. மாணவர்களும் இந்த நடவடிக்கைகளில் ஆர்வத்தோடு பங்குபெற்றார்கள். இந்த நடவடிக்கைகள் மாணவர்களின் தமிழார்வத்தை வளர்த்ததோடு அவர்களிடையே உள்ள குழு உணர்வையும் வளர்க்க உதவின எனலாம்.

அம்முகாமின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:


 

 

 

 

 
 






ஞாயிறு, 7 அக்டோபர், 2012

நான் படித்த கதை

தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களே!

நீங்கள் படித்த கதையை வலைப்பூவில் பகிர்ந்துகொள்ளும் நேரம் வந்துவிட்டது! இப்போதே நீங்கள் படித்த கதையைப் பற்றிக் கருத்துத் தெரிவியுங்கள்!