01 ஏப்ரல் 2010 தொடக்கம் 25 ஏப்ரல் 2010 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, பற்பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்குத் தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.singai-tamil.org/ என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 12 ஏப்ரல் தொடக்கம் 16 ஏப்ரல் வரை பள்ளியில் தமிழ்மொழி வாரம் அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள்.
தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்.
அன்புடன்,
தமிழ்மொழிப் பிரிவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக