எப்படி? எப்படி? அப்படி! அப்படி! முதல்
புதிரில் உங்களில் பல மாணவர்கள் பங்குபெற்று உங்கள் பதில்களைக் கருத்துரை செய்திருக்கிறீர்கள்.
பங்குபெற்ற அனைத்து மாணவர்களின் முயற்சிக்கும் எங்களின் பாராட்டுகள்!
உங்களில்
பலரிடமிருந்து பல வித்தியாசமான பதில்கள் வந்திருந்தாலும் சரியான பதில் என்று ஒன்று
தான் இருக்கமுடியும். அது என்ன பதில்?
சரியான பதில்:
அறை 3. 5 மாதங்களாகச் சாப்பிடாமல்
இருக்கும் சிங்கங்கள் இறந்திருக்கும். அதனால் குற்றவாளி அந்த அறையில் இறந்து கிடந்த
சிங்கங்களுடன் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்தான்.
எப்படி? எப்படி? அப்படி! அப்படி! முதல் புதிரில் மூன்று மாணவர்கள் சரியான பதில்களைக்
கருத்துரை செய்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
1.
முஹ்சின் (6 Topaz)
2.
டையனா (6 Topaz)
3.
அஃபில் (6 Topaz)
சரியான பதிலைக் கண்டுபிடித்து கருத்துரை செய்த
இம்மூன்று மாணவர்களுக்கும் எங்களின் பாராட்டுகள்! ஆனால் முதலில் கருத்துரைத்த முஹ்சின்
மற்றும் டையனா ஆகிய இரண்டு மாணவர்களுக்கும் தான் பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
விரைவில் அப்பரிசுகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற மாணவர்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்! அடுத்த
எப்படி? எப்படி? அப்படி! அப்படி! புதிரில் முயற்சி
செய்து பாருங்கள்!
அடுத்த புதிர் விரைவில்... எதிர்பார்த்துக்
காத்திருங்கள்!