வெள்ளி, 29 ஜூலை, 2011

தமிழ்த் தகவல் தொழில்நுட்பப் போட்டி 2011

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவு முதன்முதலாக S2 குழுமத் தமிழ்த் தகவல் தொழில்நுட்பப் போட்டி ஒன்றுக்கு இவ்வாண்டு ஏற்பாடு செய்திருந்தது. S2 குழுமத்தில் உள்ள தமிழ் ஆசிரியர்களும் மாணவர்களும் பல்லூடகப் பயிற்றுவளங்களை உருவாக்குவதில் தங்களின் படைப்பாக்கத் திறன்களை வெளிப்படுத்துவதற்கான தளத்தை ஏற்படுத்துவதற்காகவும் S2 குழுமத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ்மொழி கற்றல் கற்பித்தலுக்குப் பொருத்தமான ஒளிப்பகுதிகளைத் தயாரித்துப் பெருக்குவதற்காகவும் இந்தத் தகவல் தொழில்நுட்பப் போட்டி இவ்வாண்டு தொடங்கப்பட்டது.
இந்தப் போட்டி பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் 14 ஜூலை 2011 அன்று நடைபெற்றது. போட்டிக்கு நீதிபதிகளாகத் தேசிய கல்விக் கழகத்தின் இணை பேராசிரியர் முனைவர் A Ra சிவகுமாரன் அவர்களும் கல்வி அமைச்சின் கல்வித் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த தயாரிப்பாளர், திரு செல்வராஜூ அவர்களும் வருகை தந்திருந்தனர்.
போட்டிக்கு மொத்தம் ஐந்து பள்ளிகளிலிருந்து படைப்புகள் வந்திருந்தன. அந்தப் பள்ளிகள்:

·        குவின்ஸ்டவுன் தொடக்கப்பள்ளி
·        பெய் தொங் தொடக்கப்பள்ளி
·        நியூ டவுன் தொடக்கப்பள்ளி
·        ஃபேர்ஃவில் மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளி
·        பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி

படைப்புகள் யாவும் மாணவர்களின் தயாரிப்பாக இருந்தன. ஒவ்வொரு படைப்பும் ஒரு விளம்பரத்தைக் காட்டும் படச்சுருளாக அமைந்தது.

போட்டியில் நியூடவுன் தொடக்கப்பள்ளி வெற்றி வாகை சூடியது. பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி இரண்டாம் நிலையிலும், ஃபேர்ஃவில் மெத்தடிஸ்ட் தொடக்கப்பள்ளி மூன்றாம் நிலையில் வந்தன. குவின்ஸ்டவுன் தொடக்கப்பள்ளியும் பெய் தொங் தொடக்கப்பள்ளியும் ஆறுதல் பரிசுகள் பெற்றன.

எங்களுக்கு ஆதரவு அளித்து இப்போட்டிக்குப் படைப்புகளை அனுப்பிய அனைத்துப் பள்ளிகளுக்கும் எங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். போட்டியின்போது எடுக்கப்பட்ட படங்கள் உங்கள் பார்வைக்கு:


 



 







 





திங்கள், 25 ஜூலை, 2011

தொடக்கநிலை 6 மாணவர்களுக்கான பயிலரங்கு

22/06/2011 அன்று தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்காகத் தொடக்கநிலை இறுதியாண்டுத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராகும் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. இந்த இரண்டு மணி நேர பயிலரங்கின் போது, மாணவர்கள் தங்களின் தமிழ்த் தேர்வில் உள்ள வாய்மொழி, கட்டுரை, வேற்றுமை என ஒவ்வொரு கூறுக்கும் எவ்வாறு தங்களைத் தயார் படித்துக்கொள்ளலாம் என்பதை அறிந்துகொண்டார்கள். இப்பயிலரங்கில் பங்குபெற்ற அனைத்து மாணவர்களும் மிகுந்த பயனடைந்தார்கள் எனலாம். இப்பயிலரங்கின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: