வெள்ளி, 29 ஜூலை, 2016
வியாழன், 28 ஜூலை, 2016
இலக்கியப் பட்டறை
தேசியக் கல்விக் கழகமும் தேசியக் கலைகள் மன்றமும்
இணைந்து நடத்தும் ‘சிங்கப்பூர்த்
தமிழ் இலக்கிய வளர்ச்சி – உடனிருந்து பயிற்றுவித்தல்’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக படைப்பாக்கத் திறன் மேம்பாட்டிற்கான
இலக்கியப் பட்டறை ஒன்று 28 ஜூலை 2016 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தப்
பட்டறையில் நம் பள்ளியின் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான நூர் (5T) மற்றும் தனிஷ்கா (5R) கலந்துகொண்டார்கள்.
இந்தப் பட்டறையைப் பிரபலத் தமிழ் எழுத்தாளரான திரு.ஜெயமோகனும் சிங்கப்பூர்
எழுத்தாளரான குமாரி.கனகலதாவும் வழிநடத்தினார்கள். பட்டறையில் பங்குபெற்ற மாணவர்கள்
எழுத்தாளர்களிடமிருந்து படைப்பாக்கத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் தரமான
இலக்கியப் படைப்புகளைப் படைப்பதற்கும் தேவைப்படும் உத்திகளை அறிந்துகொண்டார்கள்.
வெள்ளி, 22 ஜூலை, 2016
திங்கள், 18 ஜூலை, 2016
இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் 2016
இவ்வாண்டு நம் பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் ஜூலை மாதம் 18-ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 29-ஆம் வரை நடைபெறுகின்றன. அதைப் பற்றிய மேல் விவரங்களை அறிந்துகொள்ள கீழ்க்காணும் இணைப்பைக் 'கிலிக்' செய்யுங்கள்.
செவ்வாய், 12 ஜூலை, 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)