திங்கள், 10 நவம்பர், 2014

தீபாவளிக் கொண்டாட்டம் 2014

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 21/10/2014 அன்று நம் பள்ளியில் தீபாவளிக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது நம் தமிழ் மாணவர்களால் பலதரப்பட்ட அங்கங்கள் சிறப்பாகப் படைக்கப்பட்டன. ஆடல், பாடல் என்று மாணவர்களின் குதூகலமான படைப்புகள் அனைவரையும் தாளம் போட வைத்தன. அந்தப் படைப்புகளுடன் தீபாவளி பற்றிய சில முக்கியத் தகவல்களும் கலைநிகழ்ச்சியின் போது அனைத்து மாணவர்களுக்கும் விளக்கப்பட்டன.

கலைநிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ஆசிரியர்கள் படைத்த பங்கரா இந்திய நடனம் அமைந்தது. அது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் அந்த நடனத்தின் ஒரு சில அசைவுகளைக் கற்றுக்கொண்டதோடு, அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தும் ஆடி மகிழ்ந்தார்கள்.

இவ்வாண்டு தீபாவளிக் கலைநிகழ்ச்சி அனைவருக்கும் ஒரு மறக்க முடியாத கலைநிகழ்ச்சியாக அமைந்தது எனலாம். நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களைச் சித்திரிக்கும் புகைப்படங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!