ஞாயிறு, 18 ஜூலை, 2010

விடுமுறைக்கான விடுகதைகளும் அதன் பதில்களும்

மாணவர்களே இதோ விடுமுறையில் கேட்கப்பட்ட விடுகதைகளும் அதன் பதில்களும் (சிவப்பு நிறத்தில்):

1. உயிர்வாழ உதவும் நண்பன்; உலகமெல்லாம் உலவுகிறான். அவன் யார்?
(1) உயிர்
(2) காற்று
(3) புத்தகம்


2. கிளையில்லாத மரம் வெட்ட வெட்ட வளரும்? அது என்ன?
(1) தென்னை
(2) சிரிப்பு
(3) தலைமுடி

3. முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
(1) மிளகாய்
(2) நாக்கு
(3) எலும்பு

இம்மூன்று விடுகதைகளுக்கும் சரியான பதில்களைக் கூறிய மாணவர்களின் பெயர்கள் பின்வருமாறு:
  1. சபின் (5A)
  2. பாத்திமா (5B)
  3. ஷாஃபிஸ் (5B)
மூன்று விடுகதைகளுக்கும் சரியாகப் பதில்களைக் கூறிய இம்மூன்று மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். முயற்சி செய்த மற்ற மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி. முயற்சியைக் கைவிடாமல் அடுத்த முறை தொடர்ந்து முயலவும்!