கட்டுரை
பின்வரும் படத்தொடரை அடிப்படையாகக் கொண்டு, 100 சொற்களுக்குக் குறையாமல் ஒரு கட்டுரை எழுது. படத்தொடரின் அடியில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களையும் சொற்றொடர்களையும் நீ இந்தக் கட்டுரை எழுதுவதற்கு உதவியாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். நீ உன் கட்டுரையை Foolscap தாளில் எழுதவும்.
சுயவிடைக் கருத்தறிதல்
பின்வரும் பகுதியைக் கருத்தூன்றிப் படி.
குமரவேல் மிகவும் அன்பாக ஒரு நாயை வளர்த்து வந்தான். அவன் தன்னுடைய வறுமை நிலையின் காரணமாக, ஒரு சமயம் தன்னுடைய நாயை ஒரு செல்வந்தரிடம் அடுகு வைத்து ஐந்நூறு வெள்ளி கடன் வாங்கினான். நாய் அச்செல்வந்தரிடம் வளர்ந்தது.
சில நாட்கள் சென்றன. ஒரு நாள் கள்வர்கள் சிலர் செல்வந்தருடைய வீட்டில் களவாடச் சென்றனர். கள்வர்கள் அச்செல்வந்தருடைய வீட்டை நெருங்கிய சமயத்தில், அந்த நாய் குரைத்து எல்லோரையும் எழுப்பியது. நாய் கள்வர்கள் மீது பாய்ந்து கடித்து அவர்களைத் துரத்தியது. கள்வர்கள் தப்பினால் போதும் என்று ஓடிவிட்டனர்.
நாயின் செயல் அச்செல்வந்தருக்கு மிக்க மகிழ்ச்சியை அளித்தது. உடனே அவர் ஒரு காகிதத்தில், “நாய் நேற்றிரவு என் வீட்டில் களவாடுவதற்கு வந்த கள்வர்களைக் கடித்துத் துரத்தியதுடன் என்னையும் எழுப்பிவிட்டது. அதனுடைய செய்கையால் என் செல்வம் களவு போகாமல் தப்பியது. நாய் செய்த இப்பேருதவிக்காக, நான் உனக்குக் கடனாகக் கொடுத்த ஐந்நூறு வெள்ளியையும் உனக்கு நன்கொடையாக்கி விட்டேன். இனி, நீ எனக்குக் கடன் தொகையைக் கொடுக்க வேண்டியதில்லை.” என்று எழுதி, நாயின் கழுத்தில் அதை வைத்துக் கட்டி, அதனுடைய தலைவனிடம் செல்லுமாறு அதற்குக் குறிப்பு காட்டினார். நாயும் அவ்வாறே குமரவேலிடம் சென்றது.
குமரவேல், தன்னுடைய நாயின் வருகையைக் கண்டு, இந்நாய் செல்வநதரை ஏமாற்றி விட்டு வந்து விட்டது என்று எண்ணிக் கடுங்கோடம் கொண்டான். உடனே ஒரு தடியை எடுத்து நாயின் மண்டையில் ஓங்கி அடித்தான்.
நாய் இறந்து வீழ்ந்தது. அதன் கழுத்தில் இருந்த சீட்டை எடுத்து அவன் படித்துப் பார்த்தான். செய்தியை அறிந்ததும், குமரவேல் சிந்தை கலங்கிக் கண்ணீர் வடித்தான். எப்பொழுதும், எதையும் சிந்தித்துப் பார்த்துவிட்டுச் செயல்படும்போதுதான் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கும். இந்த உண்மையை நாமும் உணர்ந்து கொண்டால் குமரவேலின் கதி நமக்கு ஏற்படாமல் இருக்கும்.
Q1 முதல் Q6 வரையுள்ள வினாக்களுக்கு மேற்கண்ட பகுதியிலிருந்து விடைகளைக் கண்டிறிந்து, Foolscap தாளில் உன் விடைகளை எழுதுக. (20 மதிப்பெண்கள்)
Q1 குமரவேல் எவ்வாறு தன் வறுமையைச் சமாளிக்க எண்ணினான்?
(3 மதிப்பெண்கள்)
Q2 கள்வர்கள் வீட்டை நெருங்கியதும் நாய் என்ன செய்தது?
(3 மதிப்பெண்கள்)
Q3 மகிழ்ச்சியடைந்த செல்வந்தர் குமரவேலுக்கு அனுப்பிய குறிப்பில்
என்ன எழுதினார்? (4 மதிப்பெண்கள்)
Q4 குமரவேல் ஏன் கடுங்கோபம் அடைந்தான்? (3 மதிப்பெண்கள்)
Q5 குமரவேலின் கடுங்கோபத்தால் என்ன நிகழ்ந்தது?
(4 மதிப்பெண்கள்)
Q6 இக்கதை நமக்கு எதை உணர்த்துகிறது? (3 மதிப்பெண்கள்)
முற்றும்
(*குறிப்பு: பயிற்சிநூலிலுள்ள மொழிப்பாடப்பயிற்சி 2-ஐ செய்திட மறந்திடாதீர்கள்!)