ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நம் நாட்டுக் கொடியை அறிவோமா?


நம் நாட்டுக் கொடி சிவப்பு நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் அமைந்திருக்கிறது. கொடியின் மேல் பகுதி சிவப்பு, கீழ்ப்பகுதி வெள்ளை. நம் நாட்டு மக்களின் நட்பு மனப்பான்மையையும் சகோதரத்துவத்தையும் சிவப்பு நிறம் குறிக்கிறது. மக்களிடத்தில் உள்ள தூய்மையான சீரிய பண்பினை வெள்ளை நிறம் குறிக்கிறது. கொடியின் மேல் பகுதியில், கொடிக் கம்பத்தின் அருகே ஓர் இளம்பிறையும் அதைச் சுற்றி ஐந்து விண்மீன்களும் உள்ளன. இளம் நாடொன்று ஐந்து குறிக்கோள்களான மக்களாட்சி (ஜனநாயகம்), அமைதி, முன்னேற்றம, நீதி, சமத்துவம் ஆகியவற்றை நோக்கிச் செல்வதை அவை குறிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக