வியாழன், 24 பிப்ரவரி, 2011

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 21/02/2011

இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly), 21/02/2011 தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

தமிழ் மாணவர்கள் அனைவரும் Backspace அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்குப் பள்ளி நூலகத்தைப் பற்றியும் அந்நூலகத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் தகவல்கள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு மாணவர்களுக்கென புதிதாக வாங்கப்பட்ட சில புதிய கதைப்புத்தகங்களும் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

















அதனைத் தொடர்ந்து, அப்துல் தஸ்லிம் என்ற தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவன் தான் படித்த ஒரு கதையைப் பற்றி கூடியிருந்த மாணவர்களிடம் கூறினான்.










இவ்வாண்டின் முதல் தாய்மொழி மாணவர்க்கூட்டம், மாணவர்களைப் பள்ளி நூலகத்தில் உள்ள கதைப்புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கத் தூண்டிய வண்ணம் அமைந்தது எனலாம்.


வாசிப்பை நேசிப்போம்!

சனி, 19 பிப்ரவரி, 2011

சொற்போர் 2011 தேர்வுச்சுறறு


19/02/2011 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2011 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்றுகள் தொடங்கின. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
(தஸ்லிம் (5R), மணிகண்டன் (5O), ஜமீர் (5O), சபின் (6T), பாத்திமா (6R))

'கைத்தொலைபேசிகளால் அதிகத் தீமைகளே விளைகின்றன' என்ற தலைப்பை நம் பள்ளி மாணவர்கள் ஒட்டிப் பேசினார்கள்.












நம் பள்ளி மாணவி, பாத்திமா நாச்சியா (6 ரூபி) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!