திங்கள், 16 ஜனவரி, 2012

குட்டி இந்தியாவுக்குக் கற்றல் பயணம்

சென்ற வியாழக்கிழமை 12-01-2012 அன்று, தொடக்கநிலை நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் குட்டி இந்தியாவுக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டனர். அங்குப் பொங்கல் திருநாளை முன்னிட்டுப் பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களின் பார்வைக்காக அங்கே கொண்டுவரப்பட்ட மாடுகளைக் கண்டு மாணவர்கள் பரவசம் அடைந்தனர். இப்பயணத்தில் பொங்கல் பற்றிய பல சுவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டதோடு, பொங்கல் செய்வது எப்படி என்பதையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். மேலும் அங்கு அவர்களுக்காகவே படைக்கப்பட்ட கிராமிய நடனத்தையும் மாணவர்கள் கண்டு களித்தனர். மொத்தத்தில் இந்தக் கற்றல் பயணம் நம் மாணவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

இக்கற்றல் பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 
 

 
 

 

வெள்ளி, 6 ஜனவரி, 2012

2012 தொடங்கிவிட்டது...

இனிய பல பசுமையான நினைவுகளுடன் 2011-ஆம் ஆண்டு நிறைவடைந்துவிட்டது.

புதிய உத்வேகத்துடன் 2012-ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது.

புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் எனப் பற்பல புதிய இலக்குகள் உங்கள் உள்ளங்களில் குடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்

அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள!