செவ்வாய், 30 மார்ச், 2010

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 2 - 29/03/2010

தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) இரண்டாவது முறையாக மார்ச் மாதம் 29-ஆம் தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. வழக்கம்போல், சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் AVA அறை என்னும் கேள்வி காட்சி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்கு நமது பாரம்பரிய விளையாட்டுகள் சில அறிமுகப்படுத்தப்பட்டன. பரமபதம், ஆடு புலி ஆட்டம், தாயம், பல்லாங்குழி ஆகிய நான்கு விளையாட்டுகள் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன. அதன் பின், அவர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டார்கள். தங்கள் குழுவுக்கென்று ஒதுக்கப்பட்ட பாரம்பரிய விளையாட்டினை மாணவர்கள் விளையாடினார்கள். அவர்களுக்குத் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் வழிகாட்டினார்கள். மொத்தத்தில், அன்றைய மாணவர்க்கூட்டம் மாணவர்களுக்கு மிகவும் உற்சாகமாக அமைந்தது எனலாம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக