வியாழன், 2 மே, 2013

சிறுவர்ப் படைப்புப் பட்டறை

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, தொடக்கநிலை மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்குச் சிறுவர்ப் படைப்புப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது இரண்டு பாகங்களாக நடத்தப்பட்டது. முதல் பாகம் ஏப்ரல் முதல் தேதி அன்றும் இரண்டாம் பாகம் ஏப்ரல் எட்டாம் தேதி அன்றும் பள்ளி முடிந்து ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

மாணவர்கள் அந்தப் பட்டறையில் நாடகத்தின் கூறுகள் சிலவற்றையும் படைப்பாற்றல் திறன்கள் பற்றியும் கற்றுக்கொண்டார்கள். பட்டறையின் இறுதியில், மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து ஒரு சில கதாபாத்திரங்களைப் போல் பாத்திரமேற்று ஒரு நாடகத்தை நடித்துக் காட்டினர். இப்பட்டறை மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பயனும் அளித்தது எனலாம். பட்டறையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக