செவ்வாய், 7 மே, 2013

நூலகச் சுற்றுலா

09/04/2012 அன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் தமிழ் மாணவர்கள் புக்கிட் மேரா நூலகத்திற்குக் கல்விச் சுற்றுலா மேற்கொண்டார்கள். நூலகத்தில் வழங்கப்படும் சேவைகள் பற்றி அறிந்துகொண்டதோடு அங்கு உள்ள வசதிகள் பற்றியும் தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொண்டார்கள். மேலும், மின்வசதிகள் பற்றியும் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நூலகத்தில் உள்ள வசதிகள், புத்தகங்கள் குறித்து அவர்கள் தமிழ் நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். பலமுறை நூலகத்திற்கு வந்திருந்தாலும் இதுபோன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது எனலாம். 
 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக