வியாழன், 16 மே, 2013

மின்மினிகள் 2013



 








S2 குழுமப் பள்ளிகள் இரண்டாவது ஆண்டாக மின்மினிகள் 2013 என்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இது 13 ஏப்ரல் 2013 அன்று நம் பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் தொடக்கநிலை முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழ்மொழிப் போட்டிகளோடு தகவல் தொழில்நுட்பப் போட்டியும் நடைபெற்றது. நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்றனர்.

 






பாட்டுப்போட்டியில் 1 Amethyst வகுப்பைச் சேர்ந்த காவியதர்ஷினி முதல் பரிசு கிடைத்தது.
 
 












காட்டிப் பேசுவோம் போட்டியில் 2 Topaz வகுப்பின் முகமது நூருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது.

 








கதைசொல்லும் போட்டியில் பங்குபெற்ற 3 Ruby வகுப்பைச் சேர்ந்த ராம்குமாருக்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. 4 Ruby வகுப்பைச் சேர்ந்த தேவதர்ஷினியும் ரியாஸும் பங்குபெற்ற நாடகப்போட்டியில் அவர்களுக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.

பேச்சுப்போட்டியில் பங்குபெற்ற 5 Opal வகுப்பைச் சேர்ந்த ஜீவிதாவுக்கு ஆறுதல் பரிசும் விளம்பரப் போட்டியில் பங்குபெற்ற 6 Topaz வகுப்பைச் சேர்ந்த ஷாலினி மற்றும் ஜோஷிகா ஆகிய இருவருக்கும் இரண்டாம் பரிசும் கிடைத்தன. தகவல் தொழில்நுட்பப் போட்டியில் பிளாங்கா ரைஸ் குழுவுக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
  
பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் நம் அனைவருடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக