இவ்வாண்டு தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி அனுசரித்த தமிழ்மொழி வாரம் மிகக் கோலாகலமாக நடந்து முடிந்தது. 11/04/2011 அன்று நடைபெற்ற தாய்மொழி மாணவர்க்கூட்டத்தோடு தொடங்கிய இவ்வாரத்தில் மாணவர்கள் பற்பல மொழி நடவடிக்கைகளிலும் விளையாட்டுகளிலும் மிகந்த ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள்.
பள்ளியின் அறிவிப்புப் பலகையில் நிகழ்ந்த ‘தினம் ஒரு விடுகதை’ மற்றும் ‘தமிழில் என்ன?’ என்ற போட்டிகளுக்கும் வலைப்பூவில் நடந்த ‘கண்டுபிடி! கண்டுபிடி’ என்ற போட்டிக்கும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. அதற்கான பதில்களும் அவற்றில் வெற்றி பெற்றவர்களுடைய விவரங்களும் இவ்வலைப்பூவில் விரைவில் வெளியிடப்படும். எதிர்பார்த்துக் காத்திருங்கள்!
தமிழ்மொழி வாரம் சிறப்பாக நடந்தேற உதவிய அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி! தமிழ்மொழி வாரம் முடிவுபெற்றாலும், நாம் தொடர்ந்து தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக