திங்கள், 30 ஏப்ரல், 2012

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்

18/04/2012 அன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்ற ஒரு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் உறுமி மேளக் குழுவினர்களின் இசைக் கச்சேரியையும் பொய்க்கால் குதிரைகளின் ஆட்டத்தையும் கண்டு களித்தனர். அத்துடன், மாணவர்கள் உறுமி மேளம், பொய்க்கால் குதிரை என்ற இவ்விரு பாரம்பரிய கலைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டனர். மாணவர்கள் உறுமி மேளக் கருவிகளை இசைத்தும் பொய்க்கால் குதிரைகளைத் தொட்டும் பார்த்தனர். இக்கலை நிகழ்ச்சி மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் அமைந்தது எனலாம். கலை நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
 

 

 

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக