ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன!

தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, சென்ற ஆண்டுகளைப் போல் இல்லாமல், இவ்வாண்டு 09 ஏப்ரல் தொடக்கம் 20 ஏப்ரல் வரை பள்ளியில் இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அந்தக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் வகையில் இன்று பள்ளியில் தாய்மொழி மாணவர்க்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் போது, இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.

இன்று தொடக்கம், அடுத்த வாரம் வெள்ளி வரை (20/04/2012) அனுசரிக்கப்படும் இந்த இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்களின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இது குறித்த விரிவான விவரங்களை வலைப்பூவின் இடப்புறத்தில் உள்ள தொடர்பினை நீங்கள் கிளிக் செய்து காணலாம்.

இவ்விரு வாரங்களின் போது நிகழும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் நீங்கள் இவ்வலைப்பூவில் உடனுக்குடன் எதிர்பார்க்கலாம்.

தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்! 

 

 

 

 

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக