திங்கள், 7 மே, 2012

மொழி விளையாட்டுகள்

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு, முதலாம் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்காக மொழி விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரு வகுப்பு மாணவர்களும் முதலில் குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். பின், அவர்களுக்கு இரு படங்களுக்கான படத்துண்டுகள் கொடுக்கப்பட்டன. மாணவர்கள் தங்கள் குழுக்களில் கொடுக்கப்பட்ட படத்துண்டுகளைச் சரியாக இணைத்துப் படத்தில் உள்ள பறவை, விலங்கு என்ன என்பதைக் கண்டுபிடிக்கவேண்டும். அனைத்து மாணவர்களும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் தங்கள் குழுக்களில் அப்படத்துண்டுகளைச் சரியாக இணைக்க முற்பட்டனர். பின்னர், மாணவர்கள் அந்த உயிரினங்களின் பெயர்களை ஒரு தாளில் எழுதி, அவற்றைப் பற்றி உரையாடினார்கள். அம்மொழி நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக