S2 குழுமப் பள்ளிகள் முதன்முதலாக “மின்மினிகள் 2012” என்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இது 12 ஏப்ரல் 2012 அன்று கெண்டமன் தொடக்கப்பள்ளியில் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்ச்சியில் தொடக்கநிலை முதலாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான தமிழ்மொழி போட்டிகள் நடைபெற்றன. நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் இந்தப் போட்டிகளில் பங்குபெற்றனர்.
பாட்டுப்போட்டியில் 1 Opal வகுப்பைச் சேர்ந்த முகமது ஷஃபிக்கு ஆறுதல் பரிசு கிடைத்தது.
பாத்திரம் ஏற்று நடித்தல் போட்டியில் 2 Opal வகுப்பின் ராம்குமாருக்கு மூன்றாம் பரிசு கிடைத்தது.
கதைசொல்லும் போட்டியில் பங்குபெற்ற 3 Topaz வகுப்பைச் சேர்ந்த ரியாஸ்க்கும் நாடகப்போட்டியில் பங்குபெற்ற 4 Ruby வகுப்பைச் சேர்ந்த ஜீவிதா மற்றும் டிவாஷினி ஆகிய இருவருக்கும் ஆறுதல் பரிசு கிடைத்தது.
பேச்சுப்போட்டியில் பங்குபெற்ற 5 Sapphire வகுப்பைச் சேர்ந்த ஜோஷிகாவுக்கு இரண்டாம் பரிசும் விளம்பரப் போட்டியில் பங்குபெற்ற 6 Sapphire வகுப்பைச் சேர்ந்த தஜ்மிலுக்கு முதல் பரிசும் கிடைத்தன.
பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் நம் அனைவருடைய பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக