திங்கள், 30 ஏப்ரல், 2012

நாடகப் பட்டறை

16/04/2012 அன்று தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொள்ள நாடகப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் அதில் நாடகத்தின் கூறுகள் சிலவற்றையும் நாடக உத்திகள் பற்றியும் கற்றுக்கொண்டார்கள். பட்டறையின் இறுதியில், மாணவர்கள் குழுக்களாகப் பிரிந்து ஒரு சில கதாபாத்திரங்களைப் போல் பாத்திரமேற்று நடித்துக் காட்டினர். இந்நாடகப் பட்டறை மாணவர்களை உற்சாகப்படுத்தியதோடு அவர்களுக்குப் பயனும் அளித்தது எனலாம். பட்டறையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு:
 





 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக