வெள்ளி, 12 மார்ச், 2010

கண்டுபிடி! கண்டுபிடி! இம்மாத விடுகதைகள்!

மாணவர்களே, இதோ உங்களுக்காக மூன்று புதிய விடுகதைகளுடன் வந்துவிட்டது, 'கண்டுபிடி! கண்டுபிடி!' அங்கம்.

பின்வரும் விடுகதைகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா? இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணைக்கலாம் (Comments)! அவ்வாறு செய்யும் போது உங்கள் பெயர்களையும் வகுப்புகளையும் குறிப்பிட மறவாதீர்கள்! இது குறித்து ஏதேனும் உதவிகள் வேண்டுமென்றால், உங்கள் தமிழாசிரியரை நீங்கள் அணுகலாம்.

1. ஆற்றைக் கடக்கும்; அக்கரை போகும்; தண்ணீரில் கலக்காது; தானும் நடக்காது; அது என்ன?

(1) மண்
(2) கப்பல்
(3) பாலம்

2. ஊரெல்லாம் சுற்றுவான். வீட்டுக்குள் வரமாட்டான். அவன் யார்?

(1) தண்ணீர்
(2) செருப்பு
(3) வாசல்

3. நான் பெற்ற பிள்ளைக்கு ஒற்றைக்கண். அது என்ன?

(1) ஊசி
(2) முட்டை
(3)நிலா

இப்போதே உங்கள் பதில்களை நீங்கள் இந்த இடுகையுடன் இணையுங்கள் (Comments)! இம்மாதம் யாரெல்லாம் சரியாகச் சொல்கிறார்கள் என்பதைப் பார்க்கலாம்...

6 கருத்துகள்: