ஞாயிறு, 18 அக்டோபர், 2009

தமிழ்க் கருத்தறிதல் பட்டறை

பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவு தொடக்கநிலை 4 மற்றும் தொடக்கநிலை 5 மாணவர்களுக்கு 06-10-2009 அன்று பள்ளியில் கருத்தறிதல் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த இரண்டு மணி நேரப் பட்டறையில் ‘ஏன்’, ‘எவ்வாறு’ முதலிய கேள்வி வகைகள் குறித்தும் அக்கேள்வி வகைகளுக்குப் பதிலளிக்கும் உத்திகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கப்பட்டன. இப்பட்டறையின்போது, மாணவர்கள் பகுதிகளிலிருந்து பதில்களை அடையாளம் காணுதல், அவற்றைக் கேள்வி வகைக்கு ஏற்ப பதிலளித்தல் முதலிய நடவடிக்கைகளில் தங்கள் குழுக்களில் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக