திங்கள், 26 மார்ச், 2012

நாடகப் பட்டறை வகுப்புகள்

இந்தத் தவணையில், தொடக்கநிலை முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்காக நாடகப் பட்டறை வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளை ரவீந்திரன் நாடகக் குழுவைச் சேர்ந்த திரு.சௌந்தராஜன் அவர்கள் வழிநடத்துகிறார். இவர் நிஜங்கள் என்ற வசந்தம் நாடகத்தொடரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகுப்புகளின் இறுதியில் மாணவர்கள் ஒரு நாடகத்தைப் படைக்கவிருக்கின்றனர். அடுத்த தவணையில் நடைபெறும் தமிழ் மாணவர்க் கூட்டத்தின் போது அந்த நாடகம் மற்ற நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒளியேற்றப்படும். இந்த நாடகப் பட்டறை வகுப்புகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக