வியாழன், 15 மார்ச், 2012

இரண்டாம் வகுப்புக்கான ‘நான் என் தாய்மொழியை நேசிக்கிறேன்’ முகாம்

கடந்த 09/03/2012 அன்று தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நம் பள்ளியின் தாய்மொழிப் பிரிவு நான் என் தாய்மொழியை நேசிக்கிறேன் என்ற தாய்மொழி முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாம் தொடக்கநிலை இரண்டாம் வகுப்பின் தாய்மொழிப் பாடவேளையின் போது நடைபெற்றது.

முகாமின் முற்பகுதியில் மாணவர்கள் தங்கள் தாய்மொழி தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்கள். தமிழ்மொழி நடவடிக்கைகளாக மாணவர்கள் சொல் மற்றும் வாக்கியம் உருவாக்கும் விளையாட்டு, துண்டுகள் இணைத்து எழுத்து உருவாக்கும் விளையாட்டு ஆகியவற்றில் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்குபெற்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 





 
















 







தொடக்கநிலை இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியை என்றும் நேசிக்கும் வகையில் விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் அமைந்தன எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக