செவ்வாய், 7 ஜூன், 2011

தாய்மொழி முகாமில் தமிழ்

கடந்த 21/05/2011 அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு நம் பள்ளி தாய்மொழி முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. முகாமின் முற்பகுதியில் மாணவர்கள் தங்கள் தாய்மொழி தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்கள். தமிழ்மொழி நடவடிக்கையாக நாடகப் பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில் நான்காம் வகுப்பு மாணவர்களோடு, தொடக்கநிலை 3,5,6 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபெற்றனர்.

ரவிந்திரன் நாடகக்குழுவைச் சேர்ந்த திரு.சௌந்தரராஜன் அப்பயிலரங்கில் சில நாடக உத்திகளை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார். மாணவர்கள் நாடக விளையாட்டுகளிலும் நாடகப் படைப்புகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டுப் பயனடைந்தார்கள்.

அப்பயிலரங்கின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக