29 ஆகஸ்ட் 2014 அன்று இவ்வாண்டின் இரண்டாம் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் அன்று காலை நடன அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
அங்கு, தொடக்கநிலை நான்காம் வகுப்பு மாணவர்கள் சிலர் பங்குபெற்ற என் கனவுக்கடை போட்டியில் இடம்பெற்ற ஒரு சில அங்கங்களும் படைப்புகளும் ஒளிப்பரப்பப்பட்டன. அதன் பிறகு, 'ஒரு நிமிடத்திறன்' அங்கத்தில் பங்குபெற்ற தங்கள் சக மாணவர்களின் படைப்புகளை அனைவரும் கண்டு மகிழ்ந்தார்கள். பங்கெடுத்த மாணவர்களுக்கு ஆரவாரமும் உற்சாகமும் கொடுத்த அதே வேளையில், அவர்களும் எப்படி இந்த அங்கத்தில் பங்குபெறலாம் என்பதைப் பற்றிய தகவல்களும் அன்று அவர்களுக்கு வழங்கப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக