சனி, 1 மார்ச், 2014

உங்கள் சிந்தனைக்கு

ஒரு சமயம், ஒரு குருவும் அவனுடைய சீடனும் ஒரு காட்டுப் பாதையில் நடந்து கொண்டிருந்தார்கள். வழியில் துளிவிட்டிருந்த சிறு செடியைப் பிடுங்கும்படி குரு சீடனிடம் சொல்ல அவனும் சட்டெனெ அதை ஒரு நொடியில் செய்து முடித்தான்.

சற்றுத் தூரம் தள்ளி, நன்கு வளர்ந்திருந்த செடியொன்றைப் பிடுங்கும்படி குரு பணித்தார். சீடன் சற்றுக் கஷ்டப்பட்டு, தனது இரண்டு கைகளாலும் அச்செடியைப் பிடுங்கிப் போட்டான்.

இன்னும் சற்றுத் தூரம் சென்ற பிறகு, ஒரு சிறு மரம் அளவிற்கு வளர்ந்திருந்த செடி ஒன்றைப் பிடுங்கும்படி அவர் சொன்னபோது, சீடன் தன்னுடைய முழு பலத்தையும் உபயோகித்தும் அவனால் அதைப் பிடுங்க முடியாமல் போய்விட்டது.

அதை அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த குரு, “பிரச்சினைகளும் இப்படித்தான்! என்று சொன்னார். உடனே சீடன் கேட்டான், “பிரச்சினைகளுக்கும் செடிக்கும் என்ன தொடர்பு?”

குரு புன்னகையுடன் அவனுக்கு விளங்கும்படி, பிரச்சினைகள் துளிர் விடும்போதே, அதைத் தீர்க்க முயன்றால் தீர்த்து விடலாம். அதை வளர விட்டு, அது மரம்போல வளர்ந்து பெரிதாகிவிட்டால், பிறகு உன்னால் ஒன்றும் செய்ய முடியாது! என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக