திங்கள், 1 ஏப்ரல், 2013

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் 2013 தொடங்கிவிட்டன!


30 மார்ச் 2013 தொடக்கம் 28 ஏப்ரல் 2013 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாண்டு 01 ஏப்ரல் தொடக்கம் 13 ஏப்ரல் வரை பள்ளியில் இருவாரத் தமிழ் மொழி கொண்டாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. அந்தக் கொண்டாட்டங்களைத் தொடங்கி வைக்கும் வகையில் இன்று பள்ளியில் தாய்மொழி மாணவர்க்கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தின் போது, இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டன.

இன்று தொடக்கம், அடுத்த வாரம் சனி வரை (13/04/2013) தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இது குறித்த விரிவான விவரங்களை வலைப்பூவின் இடப்புறத்தில் உள்ள தொடர்பினை நீங்கள் கிளிக் செய்து காணலாம்.

இவ்விரு வாரங்களின் போது நிகழும் நடவடிக்கைகள் பற்றிய செய்திகளையும் புகைப்படங்களையும் நீங்கள் இவ்வலைப்பூவில் உடனுக்குடன் எதிர்பார்க்கலாம்.
  
தமிழை நேசிப்போம்! தமிழில் பேசுவோம்! 

 

 
 



 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக