இவ்வாண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, 12/11/2012 அன்று நம் பள்ளியில், தீபாவளிக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியின்போது பலதரப்பட்ட அங்கங்கள் படைக்கப்பட்டன. மாணவர்களின் படைப்புகளுடன் தீபாவளி பற்றிய முக்கியத் தகவல்களும் கலைநிகழ்ச்சியின் போது விளக்கப்பட்டன. மொத்தத்தில், இவ்வாண்டின் தீபாவளிக் கலைநிகழ்ச்சி பிற மாணவர்களையும் ஆசிரியர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற சில சிறப்பு அம்சங்களின் படங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. கண்டு மகிழுங்கள்!
தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவன், மணிகண்டன் மிருதங்கம் இசைக் கருவியை வாசித்துத் தீபாவளிக் கலைநிகழ்ச்சியைப் பிரமாண்டத்துடன் தொடங்கி வைத்தான். அவனின் மிருதங்க இசை அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தது.
தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவன், மணிகண்டன் மிருதங்கம் இசைக் கருவியை வாசித்துத் தீபாவளிக் கலைநிகழ்ச்சியைப் பிரமாண்டத்துடன் தொடங்கி வைத்தான். அவனின் மிருதங்க இசை அனைவரையும் இசை மழையில் நனைய வைத்தது.
நிகழ்ச்சியின்போது தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்களின் நடனம் அனைவரையும் தாளம் போட வைத்தது.
நிகழ்ச்சியில் தொடக்கநிலை ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் படைத்த துடுப்புமிக்க நடனமும் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.