சனி, 13 ஆகஸ்ட், 2016

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 2016

இவ்வாண்டின் இரண்டாம் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) 12 ஆகஸ்டு 2016 அன்று இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் வழக்கம்போல் பள்ளியின் நடன அறையில் ஒன்றுகூடினர். 

இந்த ஆண்டின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களின்போது நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் தொகுப்பைக் கொண்ட ஒளிக்காட்சி ஒன்று மாணவர்களுக்குக் காட்டப்பட்டது. சில மாணவர்கள் தாங்கள் பங்கேற்ற நடவடிக்கைகள் பற்றியும் அவற்றில் அவர்களுடைய அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்துகொண்டார்கள்.

இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்களின்போது நடைபெற்ற பட்டறைகளில் மாணவர்கள் படைத்த படைப்புகளைக் கொண்ட ஒளிக்காட்சிகளும் மாணவர்க்கூட்டத்தின் போது காட்டப்பட்டன.


மாணவர்க்கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 



இவ்வாண்டு பள்ளியில் நடைபெற்ற தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள கீழ்க்காணும் இணைப்பைக் கிளிக் செய்யுங்கள்;



வியாழன், 4 ஆகஸ்ட், 2016

கடிகாரம் செய்து பார்க்கலாம்!


#தொடக்கநிலை1&2        #தமிழ்வகுப்பு      # மகிழ்ச்சியானவகுப்பு

வெள்ளி, 29 ஜூலை, 2016

சொல் விளையாட்டு!




#தொடக்கநிலை1தமிழ்வகுப்பு      # மகிழ்ச்சியானவகுப்பு

வியாழன், 28 ஜூலை, 2016

இலக்கியப் பட்டறை

தேசியக் கல்விக் கழகமும் தேசியக் கலைகள் மன்றமும் இணைந்து நடத்தும் ‘சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய வளர்ச்சி உடனிருந்து பயிற்றுவித்தல்’ என்ற நிகழ்வின் ஒரு பகுதியாக படைப்பாக்கத் திறன் மேம்பாட்டிற்கான இலக்கியப் பட்டறை ஒன்று 28 ஜூலை 2016 அன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தப் பட்டறையில் நம் பள்ளியின் தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவர்களான நூர் (5T) மற்றும் தனிஷ்கா (5R) கலந்துகொண்டார்கள். 


இந்தப் பட்டறையைப் பிரபலத் தமிழ் எழுத்தாளரான திரு.ஜெயமோகனும் சிங்கப்பூர் எழுத்தாளரான குமாரி.கனகலதாவும் வழிநடத்தினார்கள். பட்டறையில் பங்குபெற்ற மாணவர்கள் எழுத்தாளர்களிடமிருந்து படைப்பாக்கத் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் தரமான இலக்கியப் படைப்புகளைப் படைப்பதற்கும் தேவைப்படும் உத்திகளை அறிந்துகொண்டார்கள்.

திங்கள், 18 ஜூலை, 2016

இருவாரத் தமிழ் மொழிக் கொண்டாட்டங்கள் 2016

இவ்வாண்டு நம் பள்ளியின் இருவாரத் தமிழ்மொழிக் கொண்டாட்டங்கள் ஜூலை மாதம் 18-ஆம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 29-ஆம் வரை நடைபெறுகின்றன. அதைப் பற்றிய மேல் விவரங்களை அறிந்துகொள்ள கீழ்க்காணும் இணைப்பைக் 'கிலிக்' செய்யுங்கள்.

செவ்வாய், 12 ஜூலை, 2016

வாங்க விளையாடலாம்!


 #தொடக்கநிலை 5             #தமிழ்வகுப்பு            #மகிழ்ச்சியான வகுப்பு       
#எழுவாய்-பயனிலை பாடம்

செவ்வாய், 31 மே, 2016

கட்டுரைப் பயிலரங்கு 2016

அரையாண்டு விடுமுறை வகுப்புகளின்போது, தொடக்கநிலை ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு தமிழ் மாணவர்களுக்காகத் தமிழ்க் கட்டுரைப் பயிலரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. 


மாணவர்கள் பயிலரங்கில் கலந்துகொண்டு கட்டுரையை இன்னும் சிறப்பாக எழுதுவதற்கான உத்திகளை அறிந்துகொண்டனர். பயிலரங்கின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: 


புதன், 25 மே, 2016

வெற்றி வாகை சூடிய மாணவர்கள்


இவ்வாண்டு பள்ளிப் பருவத்தின் முதல் பாதியில் நடத்தப்பட்ட தமிழ்மொழிப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்!!!! 

திங்கள், 23 மே, 2016

'கனவு நனவாகிறது' 2016


20 மே அன்று தொடக்கநிலை நான்காம் வகுப்புத் தமிழ் மாணவர்களான காவியா, இனியா, மஃவுசா, சைனப், ஹெம்ராஜ், டிவேஷ் ஆகியோர் கனவு நனவாகிறது 2016 என்ற போட்டியில் நம் பள்ளியைப் பிரதிநிதித்துப் பங்குபெற்றனர். இந்தப் போட்டியில் அவர்கள் ஒரு கடையை அமைத்து, எழுதுபொருட்களை விற்பதோடு அவர்களின் கடையைப் பற்றி அவர்கள் விளம்பரமும் செய்யவேண்டியிருந்தது. 

‘வி.ஐ.பி கடை என்று தங்கள் கடைக்குப் பெயர் சூட்டி, அவர்களின் கடையைப் பற்றி நம் பள்ளி மாணவர்கள் சிறப்பாக விளம்பரம் செய்தார்கள். போட்டியின் இறுதியில், அவர்களுக்கு ஆறுதல் பரிசு கிட்டியது. அந்த ஆறு மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள்! 

போட்டியின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: