எப்படி? எப்படி? அப்படி! அப்படி! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எப்படி? எப்படி? அப்படி! அப்படி! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 29 ஏப்ரல், 2014

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! - 1 விடை

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! முதல் புதிரில் உங்களில் பல மாணவர்கள் பங்குபெற்று உங்கள் பதில்களைக் கருத்துரை செய்திருக்கிறீர்கள். பங்குபெற்ற அனைத்து மாணவர்களின் முயற்சிக்கும் எங்களின் பாராட்டுகள்!

உங்களில் பலரிடமிருந்து பல வித்தியாசமான பதில்கள் வந்திருந்தாலும் சரியான பதில் என்று ஒன்று தான் இருக்கமுடியும். அது என்ன பதில்?

சரியான பதில்:
அறை 3. 5 மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் இறந்திருக்கும். அதனால் குற்றவாளி அந்த அறையில் இறந்து கிடந்த சிங்கங்களுடன் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்தான்.

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! முதல் புதிரில் மூன்று மாணவர்கள் சரியான பதில்களைக் கருத்துரை செய்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

1.  முஹ்சின் (6 Topaz)
2.  டையனா (6 Topaz)
3.  அஃபில் (6 Topaz)

சரியான பதிலைக் கண்டுபிடித்து கருத்துரை செய்த இம்மூன்று மாணவர்களுக்கும் எங்களின் பாராட்டுகள்! ஆனால் முதலில் கருத்துரைத்த முஹ்சின் மற்றும் டையனா ஆகிய இரண்டு மாணவர்களுக்கும் தான் பரிசுகள் காத்துக்கொண்டிருக்கின்றன. விரைவில் அப்பரிசுகள் உங்களைத் தேடி வரும்.

மற்ற மாணவர்கள் மனந்தளர்ந்து விடாதீர்கள்! அடுத்த எப்படி? எப்படி? அப்படி! அப்படி! புதிரில் முயற்சி செய்து பாருங்கள்!

அடுத்த புதிர் விரைவில்... எதிர்பார்த்துக் காத்திருங்கள்!

வெள்ளி, 28 மார்ச், 2014

எப்படி? எப்படி? அப்படி! அப்படி! - 1

ஒரு சமயம் குற்றவாளி ஒருவனுக்கு வித்தியாசமான தண்டனை விதிக்கப்பட்டது. அவனிடம் மூன்று வெவ்வேறு அறைகள் பற்றிக் கூறப்பட்டது. அந்த அறைகளிலிருந்து ஒன்றை அவன் தேர்வு செய்யவேண்டும் என்றும் அவன் அந்த அறைக்குள் சென்று சில மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்தால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.

அந்த மூன்று அறைகளிலும் வெவ்வேறு நிலைமைகள் இருந்தன. அவை பின்வருமாறு:

அறை 1 - ஆயிரக்கணக்கான கொடிய விஷப் பாம்புகளைக் கொண்ட அறை

அறை 2 - துப்பாக்கிகளுடன் காத்திருக்கும் காவலாளிகளைக் கொண்ட அறை

அறை 3 - மாதங்களாகச் சாப்பிடாமல் இருக்கும் சிங்கங்கள் கொண்ட அறை


இறுதியில் குற்றவாளி ஓர் அறையைத் தேர்வு செய்து உள்ளே சென்றான். அவன் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் உயிருடன் இருந்ததால் அவனுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது. அவனும் இனிமேல் தவறு செய்யமாட்டான் என்று உறுதி பூண்டு அங்கிருந்து புறப்பட்டான்.

அவன் எந்த அறையைத் தேர்வு செய்திருப்பான்? அவன் எப்படிச் சில மணி மணிநேரத்திற்குப் பின்பும் அவ்வறையில் உயிருடன் இருந்தான்?

எப்படி? எப்படி? அப்படி! அப்படி!

உங்களுக்குப் பதில் தெரிந்தால், உடனே கீழே கருத்துரையிடுக. கருத்துரை செய்வதில் உதவி தேவைப்பட்டால், மேலே கருத்துரைப்பது எப்படி? என்பதை கிலிக் செய்து உதவி பெறுங்கள்! 

சரியான பதில் கூறும் முதல் மாணவனுக்குப் பரிசு காத்துக்கொண்டிருக்கிறது!