சனி, 31 மார்ச், 2012

தமிழ்மொழி வாழ்த்து


பாடல் வரிகள்: மகாகவி  பாரதியார்
பாடல் இசை: உமறுப் புலவர் தமிழ்மொழி நிலையம்


வெள்ளி, 30 மார்ச், 2012

வளமான வரிகள்


பாடல் வரிகள் : பா.விஜய்

திங்கள், 26 மார்ச், 2012

நாடகப் பட்டறை வகுப்புகள்

இந்தத் தவணையில், தொடக்கநிலை முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்களுக்காக நாடகப் பட்டறை வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வகுப்புகளை ரவீந்திரன் நாடகக் குழுவைச் சேர்ந்த திரு.சௌந்தராஜன் அவர்கள் வழிநடத்துகிறார். இவர் நிஜங்கள் என்ற வசந்தம் நாடகத்தொடரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வகுப்புகளின் இறுதியில் மாணவர்கள் ஒரு நாடகத்தைப் படைக்கவிருக்கின்றனர். அடுத்த தவணையில் நடைபெறும் தமிழ் மாணவர்க் கூட்டத்தின் போது அந்த நாடகம் மற்ற நிலைகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒளியேற்றப்படும். இந்த நாடகப் பட்டறை வகுப்புகளின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:

 

 

 


வியாழன், 15 மார்ச், 2012

தமிழ்த் திறன் மேம்பாட்டுத் திட்டம் (த.தி.மே.தி) தொடங்கியது

தமிழ்த் திறன் மேம்பாட்டுத் திட்டம் என்ற ஒன்றுக்கு முதன்முறையாகப் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தமிழ்மொழிப் பிரிவு ஏற்பாடு செய்திருந்தது. தமிழ் மாணவர்களிடையே கற்பனைத் திறன் (Imagination), புத்தாக்கத் திறன் (Creativity), சிந்தனைத் திறன் (Criticial Thinking) மற்றும் படைப்பாற்றல் திறன் (Presentation Skill) முதலியவற்றை அண்மைய தொழில்நுட்பத்தைக் கொண்டு வளர்த்தல், அவர்களுக்குப் படச்சுருள் தயாரிப்புத் தொடர்பான திறன்களைக் கற்பித்தல், தொழில்நுட்பத் தொடர்பான போட்டிகளில் பங்குபெறுவதற்குத் தயார் படுத்துதல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தில் பங்குபெறுவதற்குச் சில தொடக்கநிலை மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்கள் தமிழ் ஆசிரியர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த 12/03/2012 அன்று இத்திட்டத்தின் முதல் வகுப்பு நடைபெற்றது. முதல் கட்டமாக, மாணவர்களுக்கு இத்திட்டத்தின் நோக்கங்கள் குறித்தும் அவர்கள் இத்திட்டத்தில் எவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்பன குறித்தும் விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 

 

 

 





இத்திட்டத்தின் வழி மாணவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொண்டு விரைவில் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் ஒரு சிறந்த படைப்பை வழங்குவர் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இரண்டாம் வகுப்புக்கான ‘நான் என் தாய்மொழியை நேசிக்கிறேன்’ முகாம்

கடந்த 09/03/2012 அன்று தொடக்கநிலை இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நம் பள்ளியின் தாய்மொழிப் பிரிவு நான் என் தாய்மொழியை நேசிக்கிறேன் என்ற தாய்மொழி முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இம்முகாம் தொடக்கநிலை இரண்டாம் வகுப்பின் தாய்மொழிப் பாடவேளையின் போது நடைபெற்றது.

முகாமின் முற்பகுதியில் மாணவர்கள் தங்கள் தாய்மொழி தொடர்பான நடவடிக்கைகளில் கலந்துகொண்டார்கள். தமிழ்மொழி நடவடிக்கைகளாக மாணவர்கள் சொல் மற்றும் வாக்கியம் உருவாக்கும் விளையாட்டு, துண்டுகள் இணைத்து எழுத்து உருவாக்கும் விளையாட்டு ஆகியவற்றில் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் பங்குபெற்றனர்.

அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 





 
















 







தொடக்கநிலை இரண்டாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் தங்கள் தாய்மொழியை என்றும் நேசிக்கும் வகையில் விளையாட்டுகளும் நடவடிக்கைகளும் அமைந்தன எனலாம்.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

தாய்மொழி மாணவர்க்கூட்டம் 27/02/2012

இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான மாணவர்க்கூட்டம் (Morning Assembly), 27/02/2012 தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. வழக்கம்போல் சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ் மாணவர்கள் அனைவரும் தாய்மொழி அறை ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.


அங்கு, அவர்களுக்கு நூல்களைப் படிக்கும் பழக்கம் பற்றியும் அப்பழக்கத்தால் விளையும் நன்மைகள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், தற்போதுள்ள பள்ளி நூலகத்தைப் பற்றியும் அந்நூலகத்தில் உள்ள ஒரு சில தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் தகவல்கள் வழங்கப்பட்டன.

 









 



அதனைத் தொடர்ந்து, தொடக்கநிலை மூன்றாம் வகுப்பு மாணவி ஷாலினி, தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் ஜோஷிகா, ஷாலினி ஆகிய மூவரும் தாங்கள் படித்த ஒரு கதையைப் பற்றிக் கூடியிருந்த மாணவர்களிடம் கூறினார்கள்.



 









இவ்வாண்டின் முதல் தாய்மொழி மாணவர்க்கூட்டம், மாணவர்களை வாசிக்கும் பழக்கத்ததிற்குத் தூண்டும் வண்ணம் அமைந்தது எனலாம்.

நூல் பல கல்.


திங்கள், 16 ஜனவரி, 2012

குட்டி இந்தியாவுக்குக் கற்றல் பயணம்

சென்ற வியாழக்கிழமை 12-01-2012 அன்று, தொடக்கநிலை நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புத் தமிழ் மாணவர்கள் குட்டி இந்தியாவுக்குக் கற்றல் பயணம் மேற்கொண்டனர். அங்குப் பொங்கல் திருநாளை முன்னிட்டுப் பல சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மக்களின் பார்வைக்காக அங்கே கொண்டுவரப்பட்ட மாடுகளைக் கண்டு மாணவர்கள் பரவசம் அடைந்தனர். இப்பயணத்தில் பொங்கல் பற்றிய பல சுவையான தகவல்களைப் பெற்றுக்கொண்டதோடு, பொங்கல் செய்வது எப்படி என்பதையும் மாணவர்கள் கற்றுக்கொண்டனர். மேலும் அங்கு அவர்களுக்காகவே படைக்கப்பட்ட கிராமிய நடனத்தையும் மாணவர்கள் கண்டு களித்தனர். மொத்தத்தில் இந்தக் கற்றல் பயணம் நம் மாணவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

இக்கற்றல் பயணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு:
 
 

 
 

 

வெள்ளி, 6 ஜனவரி, 2012

2012 தொடங்கிவிட்டது...

இனிய பல பசுமையான நினைவுகளுடன் 2011-ஆம் ஆண்டு நிறைவடைந்துவிட்டது.

புதிய உத்வேகத்துடன் 2012-ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது.

புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் எனப் பற்பல புதிய இலக்குகள் உங்கள் உள்ளங்களில் குடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில்

அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள!

வெள்ளி, 25 நவம்பர், 2011

தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள்!

24/11/2011 அன்று தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாயின. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நண்பகல் 12 மணிக்கெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியரின் உரைக்குப் பின், மாணவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில், நம் மாணவர்கள் தமிழ் மொழியில் மிகச்  சிறப்பாகச் செய்திருந்தனர். அவர்கள் 100 விழுக்காட்டு தேர்ச்சி பெற்றதுடன், 100 விழுக்காட்டு சிறப்புத் தேர்ச்சியும் பெற்று, தேசிய அளவினைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெளுத்து வாங்கிவிட்டீர்கள், மாணவர்களே! வாழ்த்துகள்!

மாணவர்களே, கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக நீங்கள் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டு வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புகள் பெற ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.