தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, சென்ற ஆண்டைப் போலவே, இவ்வாண்டும் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளி தமிழ்மொழி வாரத்தை அனுசரிக்கவிருக்கிறது. இவ்வாண்டு அவ்வாரம் 11 ஏப்ரல் தொடக்கம் 15 ஏப்ரல் வரை அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இவ்வலைப்பூவில் காணலாம். எதிர்பார்த்துக் காத்திருங்கள்!
வியாழன், 7 ஏப்ரல், 2011
புதன், 6 ஏப்ரல், 2011
தமிழோசை போட்டிகள் 2011
கடந்த 5 ஏப்ரல் 2011 அன்று நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நியூ டவுன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தமிழோசை 2011 போட்டிகளில் பங்குபெற்றனர். வெவ்வேறு நிலைகளுக்கு வெவ்வேறு போட்டிகள் அன்று நடத்தப்பட்டன.
தொடக்கநிலை 1 – பாடல் போட்டி
தொடக்கநிலை 2 – சொல் உருவாக்கப் போட்டி
தொடக்கநிலை 3 – கதை சொல்லும் போட்டி
தொடக்கநிலை 4 – வேடமேற்று நடித்தல் போட்டி
தொடக்கநிலை 5 – கோலம் வரையும் போட்டி
தொடக்கநிலை 6 – விளம்பரம் செய்தல் போட்டி
மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டிகளில் ஈடுபட்டார்கள். அவர்களின் முயற்சிகளுக்குக் கை மேல் பலன் கிடைத்தது.
முடிவுகள்
லோக ஜனனி (1 Opal) – ஆறுதல் பரிசு
ஜோஷிகா & ஷாலினி (4 Opal) – மூன்றாம் பரிசு
அப்துல் தஸ்லிம் (5 Ruby) & M.அஜெய் (5 Sapphire) – மூன்றாம் பரிசு
சபின் சாரா (6 Topaz) – இரண்டாம் பரிசு
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டிகளில் பங்குபெற்ற மற்ற மாணவர்களுக்கும் நிகழ்ச்சி அன்று பார்வையாளர்களாக வருகை அளித்த மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி!
வியாழன், 31 மார்ச், 2011
தமிழ் மொழி மாதம் ஆரம்பம்!
01 ஏப்ரல் 2011 தொடக்கம் 24 ஏப்ரல் 2011 வரை சிங்கப்பூரில் தமிழ்மொழி மாதம் அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, பற்பல சிறப்பு நிகழ்ச்சிகள் தீவு முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை, http://www.thangameen.com/tmvizha என்ற இணையப் பக்கத்திற்குச் சென்று நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
அது மட்டுமல்லாமல், 01 ஏப்ரல் 2011 வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு வசந்தம் தொலைக்காட்சியில் தமிழ்மொழி மாதத்தின் தொடக்கவிழா (தமிழா தமிழா) நேரடி ஒளிபரப்பாகக் காண்பிக்கப்படும். அதனை உங்கள் பிள்ளையுடன் சேர்ந்து காணத் தவறாதீர். அந்நிகழ்ச்சியை நீங்கள் mediacorp.sg/tlf2011 என்ற இணையத்தளம் வாயிலாகவும் காணலாம்.
தமிழ்மொழி மாதத்தை முன்னிட்டு, நம் பள்ளியிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 11 ஏப்ரல் தொடக்கம் 15 ஏப்ரல் வரை பள்ளியில் தமிழ்மொழி வாரம் அனுசரிக்கப்படும். அவ்வாரத்தின்போது, தமிழ் மாணவர்கள் பற்பல சிறப்பு நடவடிக்கைகளிலும் மொழி விளையாட்டுகளிலும் ஈடுபடுவார்கள். இதனைப் பற்றிய மேல் விவரங்களை இந்த வலைப்பூவில் காணலாம்.
தமிழை நேசிப்போம். தமிழில் பேசுவோம்.
செவ்வாய், 22 மார்ச், 2011
மாணவர்களுக்கான வளமூட்டும் வகுப்புகள்
இந்தத் தவணையில், தொடக்கநிலை இரண்டு முதல் ஐந்து வரையிலான தமிழ் மாணவர்கள் வாரந்தோறும் வளமூட்டும் வகுப்புகளில் கலந்துகொண்டு வருகிறார்கள். அதன் விவரங்கள் பின்வருமாறு:
தொடக்கநிலை இரண்டு மாணவர்கள் – கைப்பாவைப் பயிலரங்கு
தொடக்கநிலை மூன்று & நான்கு மாணவர்கள் – பேச்சு, நடிப்பு பயிலரங்கு
தொடக்கநிலை ஐந்து மாணவர்கள் – தன்னம்பிக்கை உரையாற்று பயிலரங்கு
மாணவர்கள் தங்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள இவ்வகுப்புகள் நிச்சயமாகத் துணைபுரியும்.
வியாழன், 24 பிப்ரவரி, 2011
தாய்மொழி மாணவர்க்கூட்டம் 21/02/2011
இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly), 21/02/2011 தேதியன்று பள்ளியில் நடைபெற்றது. சீனம், மலாய், தமிழ் என மாணவர்கள் அனைவரும் தத்தம் தாய்மொழிகளுக்கேற்ப பிரிக்கப்பட்டு, மாணவர்க்கூட்டத்திற்காக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
தமிழ் மாணவர்கள் அனைவரும் Backspace அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அங்கு, அவர்களுக்குப் பள்ளி நூலகத்தைப் பற்றியும் அந்நூலகத்தில் உள்ள தமிழ்ப் புத்தகங்கள் பற்றியும் தகவல்கள் வழங்கப்பட்டன. இவ்வாண்டு மாணவர்களுக்கென புதிதாக வாங்கப்பட்ட சில புதிய கதைப்புத்தகங்களும் அவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அப்துல் தஸ்லிம் என்ற தொடக்கநிலை ஐந்தாம் வகுப்பு மாணவன் தான் படித்த ஒரு கதையைப் பற்றி கூடியிருந்த மாணவர்களிடம் கூறினான்.
இவ்வாண்டின் முதல் தாய்மொழி மாணவர்க்கூட்டம், மாணவர்களைப் பள்ளி நூலகத்தில் உள்ள கதைப்புத்தகங்களை இரவல் வாங்கிப் படிக்கத் தூண்டிய வண்ணம் அமைந்தது எனலாம்.
வாசிப்பை நேசிப்போம்!
சனி, 19 பிப்ரவரி, 2011
சொற்போர் 2011 தேர்வுச்சுறறு
19/02/2011 (சனிக்கிழமை) அன்று சொற்போர் 2011 விவாதப்போட்டியின் முதல் தேர்வுச்சுற்றுகள் தொடங்கின. அத்தேர்வுச்சுற்றில் நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும் கலந்துகொண்டனர்.
(தஸ்லிம் (5R), மணிகண்டன் (5O), ஜமீர் (5O), சபின் (6T), பாத்திமா (6R))
நம் பள்ளி மாணவி, பாத்திமா நாச்சியா (6 ரூபி) தேர்வுச்சுற்றில் சிறந்த பேச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்!
வெள்ளி, 28 ஜனவரி, 2011
புதிய மின்கற்றல் தளம் ஆரம்பம்!
சென்ற திங்கட்கிழமை (24/01/2011), 'பழகு தமிழ்' என்ற புதிய மின்கற்றல் தளம் தொடக்கநிலை ஐந்து ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மாணவர்கள் தமிழ் மொழிப் பயிற்சிகளை இணையத்தைப் பயன்படுத்திச் செய்ய இந்த மின்கற்றல் தளம் உதவுகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் வகுப்புக்காகத் தயாரிக்கப்பட்ட பயிற்சிகளை வீட்டில் இருந்தபடி செய்யவும் முடிகிறது. பயிற்சிகளை மாணவர்கள் எவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று ஆசிரியர்களால் கண்காணிக்கவும் முடியும். தொடக்கநிலை ஒன்று முதல் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த மின்கற்றல் தளம் கட்டங்கட்டமாக அறிமுகம் செய்யப்படும்.


தமிழ்க் கற்பதைப் பயனுள்ளதாகவும் உள்ளத்திற்கு இன்பமூட்டுவதாகவும் அமைத்துக்கொள்ளப் 'பழகு தமிழ்' மின்கற்றல் தளம் பெரும் துணைபுரியும் என்பது திண்ணம்!
செவ்வாய், 18 ஜனவரி, 2011
சனி, 1 ஜனவரி, 2011
2011 வருக! வருக!
இனிய நினைவுகளுடன் 2010-ஆம் ஆண்டு நிறைவடைந்துவிட்டது.
புதிய உத்வேகத்துடன் 2011-ஆம் ஆண்டு பிறந்துள்ளது.
புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் என உங்கள் உள்ளங்களில் பற்பல இலக்குகள் புதிய ஆண்டில் உதித்திருக்கும்.
அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!
புதிய உத்வேகத்துடன் 2011-ஆம் ஆண்டு பிறந்துள்ளது.
புதிய கனவுகள், ஆசைகள், தீர்மானங்கள் என உங்கள் உள்ளங்களில் பற்பல இலக்குகள் புதிய ஆண்டில் உதித்திருக்கும்.
அவை அனைத்தும் நிறைவேற எங்களின் இனிய நல்வாழ்த்துக்கள்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள!
தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள்!
25/11/2010 அன்று தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளின் முடிவுகள் வெளியாயின. தொடக்கநிலை ஆறாம் வகுப்பு மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ள நண்பகல் 12 மணிக்கெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். பள்ளித் தலைமையாசிரியரின் உரைக்குப் பின், மாணவர்கள் தங்கள் முடிவுகளைப் பெற்றுக்கொண்டனர்.
இவ்வாண்டு, பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியின் தலை சிறந்த மாணவர் அனைத்துப் பாடங்களிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றதோடு, 267 புள்ளிகளைப் பெற்றிருந்தார். அவருக்கு எங்களது மனமார்ந்த பாராட்டுகள்!
சென்ற ஆண்டினைப் போலவே, இவ்வாண்டும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வுகளில், நம் மாணவர்கள் தமிழ் மொழியில் சிறப்பாகச் செய்திருந்தனர். அவர்கள் 100 விழுக்காட்டு தேர்ச்சி பெற்றதுடன், சிறப்புத் தேர்ச்சி விகிதத்தில் தேசிய அளவினைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர். வெளுத்து வாங்கிவிட்டீர்கள், மாணவர்களே! வாழ்த்துகள்!
மாணவர்களே, கடந்த சுமார் ஆறு ஆண்டுகளாக நீங்கள் பிளாங்கா ரைஸ் தொடக்கப்பள்ளியில் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் அடித்தளமாகக் கொண்டு வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புகள் பெற ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)