இவ்வாண்டின் முதல் தாய்மொழிகளுக்கான காலை மாணவர்க்கூட்டம் (Morning Assembly) 14 ஆகஸ்ட் 2015 அன்று இடம்பெற்றது. தமிழ் மாணவர்கள் அனைவரும் பள்ளியின் நடன அறையில் ஒன்றுகூடினர். தமிழ்மொழி வாழ்த்துப்பாடலுடன் அன்றைய கூட்டம் தொடங்கியது. இந்த ஆண்டு தமிழ் மாணவர்கள் தாங்கள் பங்குபெற்ற தமிழ்மொழி நடவடிக்கைகள் பற்றிய தங்கள் அனுபவங்களை மற்ற மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் இந்தக் கூட்டம் அமைந்தது. மாணவர்க்கூட்டத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு: