கடந்த 5 ஏப்ரல் 2011 அன்று நம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நியூ டவுன் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற தமிழோசை 2011 போட்டிகளில் பங்குபெற்றனர். வெவ்வேறு நிலைகளுக்கு வெவ்வேறு போட்டிகள் அன்று நடத்தப்பட்டன.
தொடக்கநிலை 1 – பாடல் போட்டி
தொடக்கநிலை 2 – சொல் உருவாக்கப் போட்டி
தொடக்கநிலை 3 – கதை சொல்லும் போட்டி
தொடக்கநிலை 4 – வேடமேற்று நடித்தல் போட்டி
தொடக்கநிலை 5 – கோலம் வரையும் போட்டி
தொடக்கநிலை 6 – விளம்பரம் செய்தல் போட்டி
மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இப்போட்டிகளில் ஈடுபட்டார்கள். அவர்களின் முயற்சிகளுக்குக் கை மேல் பலன் கிடைத்தது.
முடிவுகள்
லோக ஜனனி (1 Opal) – ஆறுதல் பரிசு
முகம்மது ரியாஸ் (2 Ruby) – இரண்டாம் பரிசு
ஜோஷிகா & ஷாலினி (4 Opal) – மூன்றாம் பரிசு
அப்துல் தஸ்லிம் (5 Ruby) & M.அஜெய் (5 Sapphire) – மூன்றாம் பரிசு
சபின் சாரா (6 Topaz) – இரண்டாம் பரிசு
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள். பள்ளியைப் பிரதிநிதித்துப் போட்டிகளில் பங்குபெற்ற மற்ற மாணவர்களுக்கும் நிகழ்ச்சி அன்று பார்வையாளர்களாக வருகை அளித்த மாணவர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றி!
நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு: